Friday 17 June 2016

              நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல் 

தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு   மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தேவகோட்டை நகராட்சி சார்பாக நடைபெற்றது.


                                         நிகழ்ச்சியில்  பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் ( பொறுப்பு ) ஜெயபால் ஆலோசனையின் பெயரில் நகராட்சி குடிநீர் பணி மேற்பார்வையாளர் மணி மாணவர்களுக்கு  நிலவேம்பு குடிநீர் கசாயத்தை வழங்கினார்.மாணவர்கள் அனைவருக்கும்,ஆசிரியர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.நகராட்சி பணி ஆய்வாளர் செந்தில் நன்றி கூறினார்.

 பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பாக மாணவ,மாணவியர்க்கு நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment