Sunday 7 June 2015

  12வது மாத மகாகுருவின் ஆசிரியர்களுக்கான பயற்சி (எனது பயற்சி வகுப்பும்)



                                              நேற்று   விருதுநகர்  இதயம் முத்து அண்ணாச்சி அவர்களின் ஆர்வத்துடன் ஜே சி இயக்கம் மற்றும் ரோட்டரி சங்கம்  சார்பாக ஜே சி இயக்கத்தின் மகாகுரு பயற்சியாளர் திரு.R.பஞ்சநாதன் அவர்கள் சுமார் 71 ஆசிரியர்களுக்கு கடந்த 11 மாதங்களாக (மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று) விருதுநகரில்  தொடர்ந்து நடத்தி வரும் பயற்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை பெற்றேன்.12வாது மாதமாக இந்த மாதம் நடைபெற்ற பயிற்சியின் தலைப்பு "CELEBRATE TEACH " பயிற்சியின் மூலமாக நிறைய தகவல்களை பெற்று கொண்டேன்.புதிய தகவல்களை நிறைய கேட்டுக்கொண்டேன்.பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அனைவரும் நிறைய விஷயங்கள் புதிதாக கற்றுக்கொண்டதாக தெரிவித்தனர்.இப்பயிற்சியில் நான் தலைமை ஆசிரியராக பணியாற்றும் பள்ளியில் எப்படி எல்லாம் கற்பித்தலில்  புதுமை புனைதல் என்கிற தலைப்பில் விளக்கமாக கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எடுத்து சொன்னேன். அருமையான வாய்ப்பு கிடைத்ததுடன் மதிய உணவும் நன்றாக இருந்தது. சுட்டி விகடன் உதவி ஆசிரியர் திரு.சரவணன் அவர்களும் சுட்டி விகடன் தொடர்பான தகவல்களை  மிக எளிமையாக எடுத்து விளக்கினார்.தொடர்ந்து இந்த பயற்சி வகுப்பிற்காக  தொடர்ந்து என்னை ஊக்க படுத்திய திரு.பஞ்சநாதன் அய்யா அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறுகிறேன்.இந்த அற்புதமான  வாய்ப்புக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


லெ .சொக்கலிங்கம் ,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.



No comments:

Post a Comment