Thursday 31 July 2014

       
               பள்ளி அளவிலான சதுரங்க போட்டிகள் 


           தேவகோட்டை -ஜூலை-   சிவகங்கை மாவட்டம்     தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.

              தமிழகம் முழுவது மாணவ-மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டுப்  போட்டிகள் வைத்துசிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தி அவர்களின்  அறிவுத்திறமையினை வெளிக்கொண்டுவர முதல்வர் சதுரங்க போட்டிகள் நடத்த உத்தரவிட்டிருந்தார்.
                                சிவகங்கை மாவட்டம்     தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார்.இதனில் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் 5ம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் விக்னேஷ் முதலிடத்தையும்,ராஜேஸ்வரன் இரண்டாம் இடத்தையும் ,மாணவி சக்தி மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றிபெற்றனர்.
                                    14 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் எட்டாம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் நவீன்குமார் முதலிடத்தையும்,ருத்திக் ரோஷன் இரண்டாம் இடத்தையும் ,மாணவி மங்கையர்க்கரசி மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றிபெற்றனர்.போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா செய்திருந்தார்.

 பட விளக்கம்தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சதுரங்க போட்டிகள் நடந்தன.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் 
லெ .சொக்கலிங்கம்,உடற்கல்வி ஆசிரியர்   கருப்பையா

     

No comments:

Post a Comment