Thursday 26 October 2023

 

மாவட்ட பேச்சு போட்டியில் ரூபாய் 3000ம் பரிசும்,பாராட்டு சான்றிதழும் பெற்று நடுநிலைப் பள்ளி மாணவி சாதனை 

மாவட்ட ஆட்சியர் கையால் பரிசு பெற்ற பள்ளி மாணவி 

அண்ணல்  காந்தியடிகள்  பிறந்த நாள் பேச்சு போட்டியில் வெற்றி பெற்று அசத்திய மாணவி 

 






தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கையால் பரிசும்,பாராட்டு சான்றிதழும் பெற்றார்.

                                               தமிழ்நாடு அரசு    தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அண்ணல் காந்தியடிகள்  பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் இப்பள்ளி மாணவி ம.கனிஸ்கா  மாவட்ட அளவில்  இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றார்.மாணவிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்  ரூபாய் 3000 பரிசுக்கான காசோலையும் ,பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் நாகராஜன் உடன் இருந்தார்.மாவட்ட அளவில் உயர்நிலை,மேல்நிலை,நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பலர்  பங்கேற்ற இப்போட்டியில் இப்பள்ளி மாணவி ம.கனிஷ்கா  வெற்றி பெற்று இரண்டாம்  பரிசினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பரிசு பெற்ற மாணவியை பள்ளி  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் , ஆசிரியர்கள் முத்துலெட்சுமி, முத்துமீனாள் , ஸ்ரீதர்  மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.மாணவி கனிஷ்காவின்  தந்தை தினக்கூலி. தாயாரும் தினக்கூலி. பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் பயிற்சி பெற்று  மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவி ம.கனிஷ்கா  தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அண்ணல் காந்தியடிகள்  பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்   ரூபாய் 3000 பரிசும்,பாராட்டு சான்றிதழும் வழங்கினார் .சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் நாகராஜன் உடன் இருந்தார்.










 

No comments:

Post a Comment