Tuesday 30 May 2017


சேக்கிழார் விழாவில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 



      தேவகோட்டை -   தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற  சேக்கிழார் விழாவில் சான்றிதழ் மற்றும் பரிசாக பணமும்  பெற்ற மாணவர்களுக்கு பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது.தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பெரிய புராணத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் தொடர்ந்து மூன்று நாட்கள் பாடி இப்பள்ளி மாணவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் பெறுவது குறிப்பிடத்தக்கது.
               தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெற்ற  சேக்கிழார் விழாவில் பெரியபுராணம்   முற்றோதுதல் நிகழ்வு மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.இந்த நிகழ்வில் பங்கு கொண்டு பெரியபுராணத்தில் உள்ள 4286 பாடல்களையும் பாடிய சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காயத்ரி,கார்த்திகேயன்,ஈஸ்வரன்,சக்திவேல்,அஜய் பிரகாஷ்,சபரி,நித்ய கல்யாணி,சந்தியா,நந்த குமார்,ராஜேஷ்,விக்னேஷ் ,ஸ்ரேகா ஆகியோருக்கு   தமிழ் வள்ளல் மெய்யப்பர் நினைவு பரிசுகளையும் சான்றிதல்களையும் சேக்கிழார் விழாக்குழு செயலர் பேரா .சபா .அருணாசலம் , பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன், சிவநெறி செல்வர் கண்டனூர் அருணாசலம், காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் வள்ளி,சிங்கப்பூர் தமிழ் பல்கலைகழகத்தின் ஓய்வு பெற்ற தமிழ் துறை தலைவர் முனைவர் சுப.திண்ணப்பன்  ஆகியோர் வழங்கினார்கள் .மாணவர்களுக்கு பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியை செல்வமீனாள் ஆகியோர்க்கும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பரிசு மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள்  சார்பாக  பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பட விளக்கம் : தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற  சேக்கிழார் விழாவில் பெரியபுராணம்   முற்றோதுதல் நிகழ்வில் அனைத்து பாடல்களையும் பாடிய சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.பரிசுகளை சிவநெறி செல்வர் கண்டனூர் அருணாசலம்,பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன், உடன் சேக்கிழார் விழாக்குழு செயலர் பேரா .சபா .அருணாசலம் , காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் வள்ளி,சிங்கப்பூர் தமிழ் பல்கலைகழகத்தின் ஓய்வு பெற்ற தமிழ் துறை தலைவர் சுப.திண்ணப்பன்  ஆகியோர் வழங்கினார்கள்

No comments:

Post a Comment