Friday 4 March 2016

தமிழர்களின் அடையாளம் திருக்குறள்
அமெரிக்க வாழ் இந்தியர் பேச்சு

காட்சி வழியாக தமிழில் இயற்பியல் கணிதம் பாடங்களை   பெருந்தொடர் குறுந்தகடாக  வழங்குதல் விழா

தேவகோட்டை - தேவகோட்டைசேர்மன்  மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்ற காட்சி வழி  இயற்பியலும்,கணிதமும் ,அவைகளின் விளக்க உரையும் கொண்ட பெருந்தொடர் வரிசையின் குறுந்தகடு வழங்குதல் விழா நடைபெற்றது.




                                        விழாவிற்கு வந்திருந்தோரை பள்ளி  தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் வரவேற்றார்.பள்ளி செயலர் சோமசுந்தரம் தலைமை தங்கினார்.பள்ளி கல்வி தலைவர் மீனாட்சி ஆட்சி,கண்ணங்குடி உதவி  தொடக்க கல்வி அலுவலர் அடைக்கலராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் மொழி அறக்கட்டளையின் இயக்குனர் அழகப்பா ராம் மோகன் 52 பெருந்தொடர் குறுந்தகடுகளையும் , இயந்திர அண்டத்துக்கு அப்பால் என்கிற 3 புத்தகங்களையும் வழங்கி சிறப்புரையாற்றுகையில் , அறிவியல் இயற்பியல் மிகவும் முக்கியமானது.அதன் மொழி கணிதம்.இவை வலி வந்தவைகளே வேதியல் மற்றும் ஏனைய அறிவியல் துறைகள்.நாமும்,நம்முடைய உலகமும் ,  வகிக்கும் சூரிய குடும்பமும்,அக் குடும்பம் இயங்கும் இந்த அண்ட வெளியும் அதன் விண்மீன் தொகுதிகளும் கொண்டதே இப் பிரபஞ்சம்.ஆண்ட இயந்திரம் என்ற இப் பிரபஞ்சத்தின் இயந்திரமயமான இயக்கத்தையும் அதற்க்கு அப்பாலும் உள்ள அறிவியல் உண்மைகள் ,உங்கள் கைகளில் தவழும் இந்த நூல் மூன்று பகுதிகளாக வழங்குகிறது.இதை முதல் நூலாக அமெரிக்காவில் உள்ள ஆனேன்பெர்க் அறக்கட்டளையும்,கேம்பிரிட்ச் பல்கலைகழகமும் வெளியிட்டதை தொடர்ந்து இவைகள்  பரிசுகளையும்,பல்வேறு நாட்டு அங்கிகாரத்தையும்  உலகளாவிய முறையில் பெற்றுள்ளது.உலக அளவில் பல மொழிகளில் மொழி ஆக்கம் செய்யப்பட்டு பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் பல நாடுகளில் இயற்பியல் துறையில் சாதனை படித்து கற்ப்பிக்கபடுகிறது.அதன் தமிழ் வடிவமே நீங்கள் பார்க்கும் இந்த நூல்.இயற்பியலை 26 மணியளவில் 52 அரை மணி நேரக் காட்சிகளாகவும், ஒவ்வொரு காட்சிக்கும் துணைப் பாடமாக இரு பகுதிகளாக கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தால் எழுதி தயாரிக்கப்பட்டது.இந்த நூல்கள் .அதோடு இந்த நூல்களில் வரும் கேள்விகளுக்கு விடையும் மூன்றாவது பகுதியாக தரப்பட்டுள்ளது.

            ' ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்று நமது சூரிய குடும்பத் தலைவனைப் போற்றி தனது சிலம்பு காவியத்தை இளங்கோ அடிகள் தொடங்குகிறார்.இந்த கதிரவன் வரலாறு தான் நம் வரலாறு.அந்த வரலாறு தான் இயற்பியல்.அதனை இரு தொகுதிகளாக இப் புத்தகம் விளக்குகிறது.முதல் தொகுதி வன்னில் இயங்கும் பெரிய உருக்களைப் பற்றி காட்சி வடிவிலும் எழுத்து வடிவிலும்  செல்கிறது.அதனை 'இயந்திர அண்டம்'என்ற தலைப்பில் விளக்குகிறது.அதனை அடுத்து இரண்டாம் தொகுதி 'இயந்திர அண்டமும் அதற்கு  அப்பாலும்'என்று பிரபஞ்சத்தில் இயங்கும் மிக சிறிய உருக்களை பற்றி காட்சி வடிவிலும் எழுத்து வடிவிலும் சொல்லி செல்கிறது.இதனை இளம் வயது மாணவர்களாகிய நீங்கள் நன்றாக பார்த்து எதிர்காலத்தில் அறவியல் விஞ்ஞானிகழாக வர வேண்டும் என்று பேசினார். திருக்குறள்தான் தமிழர்களின் அடையாளம் என்றும் பேசினார்.குறுந்தகடு  பெரிய திரையில்  வெளியிடப்பட்டது.மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.அறிவியல் தொடர்பாக காட்சி வழி ஆர்வமூட்டுவதாக இருந்ததாக தெரிவித்தனர். விழா நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.


பட விளக்கம் : தேவகோட்டைசேர்மன்  மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்ற காட்சி வழி  இயற்பியலும்,கணிதமும் ,அவைகளின் விளக்க உரையும் கொண்ட பெருந்தொடர் வரிசையின் குறுந்தகடு வழங்குதல் விழா நடைபெற்றது.
                                            

No comments:

Post a Comment