Saturday 16 January 2016

 தேசிய இளைஞர் தின விழா 

பாவை விழா ஒப்புவித்தல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு.

தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு அரசு உதவி பெறும் பள்ளியின் முதல் வகுப்பு மாணவி மாவட்ட அளவில் முதலிடம் 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா நடைபெற்றது.இதனில் பாவை விழா ஒப்புவித்தல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற முதல் வகுப்பு மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.






                                  விழாவிற்கு வந்தவர்களை மாணவி சுமித்ரா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி விவேகானந்தர் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.விழாவில் சிவகங்கை மாவட்ட அளவில் நடைபெற்ற  பாவை விழா ஒப்புவித்தல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற முதல் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.மேலும்  தேவகோட்டை வட்டார அளவில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் ராஜேஸ்வரி,தனலெட்சுமி,மாணவர் ஆகாஷ் , ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற தனம்,கண்ணதாசன்,வெங்கட்ராமன்,கிஷோர்குமார்,திவ்யஸ்ரீ ,உமா மகேஸ்வரி,தனஸ்ரீ ஆகியோர்க்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.நிறைவாக மாணவ ,மாணவியர் விவேகானந்தரின் பொன் மொழிகளை உறுதி மொழியாக எடுத்துக் கொண்டனர்.நிறைவாக மாணவர் சகா நன்றி கூறினார்.


பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய இளைஞர் தின விழாவில் சிவகங்கை மாவட்ட அளவில் நடைபெற்ற பாவை ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற  முதல் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீக்கு பள்ளி தலைமை லெ .சொக்கலிங்கம் வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment