Monday 20 April 2015

                    

  தேவகோட்டை பள்ளியில்   திருமறை   ஒப்புவித்தல் போட்டி  
                            தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருமுறை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.


                                 தேவகோட்டை சேக்கிழார் விழா குழுவின் சார்பில் நடைபெற்ற  திருமுறை ஒப்புவித்தல் போட்டிக்கு வந்திருந்தோரை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.சேக்கிழார் விழா குழு செயலர் பேரா.சபா.அருணாசலம் தலைமை தாங்கி பேசுகையில்,நடுநிலைப் பள்ளி அளவில் உள்ள சிறுவயது குழந்தைகள் இது போன்று பாடல்களை படிப்பதன் மூலம் நல்ல எண்ணங்கள் சிறுவயது முதலே அதிகரிக்கும்.நமசிவாயம்  என சொல்வதன் மூலமும்.கேட்பதன் மூலமும் மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகி அவை நல்ல செயல்களை செய்ய தூண்டும் .அதனால்தான் பல வருடங்களாக  தொடக்க ,நடுநிலைப் பள்ளிகளில் இப்போட்டிகளை நடத்தி பரிசுகள்  வழங்கி வருகிறோம் என பேசினார்.நிகழ்ச்சியில் விழாக் குழு பொருளாளர் தட்சிணாமூர்த்தி,இணை செயலர் கவிஞர் பழனியப்பன்,செயற்குழு உறுப்பினர் ஐயப்பன்,பேரா.முத்தழகு கணேசன் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்ட  மாணவ ,மாணவியரில் 27 பேரை பரிசுக்கு தேர்ந்தெடுத்தனர்.பரிசுகள் வருகின்ற மே மாதம் தேவகோட்டை  நகர சிவன்கோவிலில் நடைபெற உள்ள சேக்கிழார் திருவிழாவில் வழங்கப்படும் என தெரிவித்தனர்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

படவிளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருமுறை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது

No comments:

Post a Comment