பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சியில் பெற்றோர்களே மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்
தேவகோட்டை செப் - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சியில் பெற்றோர்களே மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு வருகை தந்தோரை மாணவி தனலெட்சுமி வரவேற்றார்.இறைவணக்கமாக அபிராமி அந்தாதி மாணவிகளால் பாடப்பட்டது.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாமலை செட்டியார் நிகழ்ச்சிக்கு தலைமை தங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை பாண்டியன் கிராம வங்கியின் முது நிலை மேலாளர் சௌந்தர பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவர்க்கும் வங்கி கணக்கு தொடங்குவது தொடர்பாக பெற்றோரிடம் பேசினார்.கூட்டதில் தேசிய திறன் வழி தேர்வில் 3 மாணவர்கள் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கபட்டது .மாணவ,மாணவியர் விடுமறை எடுக்காமல் பள்ளிக்கு தொடர்ந்து வரவேண்டும் என கேட்டுகொள்ளபட்டது.அதற்கு பெற்றோர் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுகொள்ளபட்டது.
நிகழ்ச்சியில் திருக்குறளை இசையோடு நடனமாடும் நிகழ்ச்சி மாணவிகளால் நடத்தப்பட்டது.7 ம் வகுப்பு மாணவி தனம் ஒழுக்கத்தை பற்றி ஆங்கிலத்தில் எடுத்து கூறினார்.4 ம் வகுப்பு மாணவி காயத்திரி பொதுவான கருத்துக்களை எடுத்து கூறினார்.8 ம் வகுப்பு கிருஷ்ணவேணி ஒரு கதையை ஆங்கிலத்திலும் ,2 ம் வகுப்பு மாணவி கீர்த்தியா தமிழிலும் அழகாக கூறினார்கள்.8 ம் வகுப்பு மங்கையர்க்கரசி,நவீன்,நடராஜன் ஆகியோர் ஆங்கிலத்தில் உரையாடல் நடத்தி பெற்றோரை அதிசயத்தில் ஆழ்த்தினார்கள்.8ம் வகுப்பு மாணவி சொர்ணாம்பிகா பள்ளியில் தான் இது வரை பெற்ற அனைத்து சான்றிதல்களையும் விரிவாக ஆங்கிலத்தில் எடுத்து கூறினார்.
பள்ளி அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்க்கு பெற்றோர்கள் அழகுராசு,மீனாள் ,காயத்ரி உட்பட பல பெற்றோர் பரிசுகளை வழங்கி கருத்துக்களை கூறினார்கள்.ஆசிரியை செல்வ மீனாள் ,ஆசிரியர் ஸ்ரீதர் ,ஆசிரியை முத்து மீனாள் ஆகியோர் மாணவர்கள் தொடர்பாகவும்,பெற்றோர்கள் செய்ய வேண்டியது தொடர்பாகவும் விளக்கி கூறினார்கள்.ஆசிரியை வாசுகி தொகுத்து வழங்கியதுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் .மாணவன் ரஞ்சித்நன்றி கூறினார்.
பட விளக்கம் : IMJ -1764 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சியில் மீனாள் என்ற பெற்றோர் விநாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மங்கையர்க்கரசி என்ற மாணவிக்கு பரிசு வழங்கினார்.உடன் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாமலை, தேவகோட்டை பாண்டியன் கிராம வங்கியின் முது நிலை மேலாளர் சௌந்தர பாண்டியன்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.
பட விளக்கம் : IMJ - 1748,1776 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சியில் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை செப் - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சியில் பெற்றோர்களே மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு வருகை தந்தோரை மாணவி தனலெட்சுமி வரவேற்றார்.இறைவணக்கமாக அபிராமி அந்தாதி மாணவிகளால் பாடப்பட்டது.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாமலை செட்டியார் நிகழ்ச்சிக்கு தலைமை தங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை பாண்டியன் கிராம வங்கியின் முது நிலை மேலாளர் சௌந்தர பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவர்க்கும் வங்கி கணக்கு தொடங்குவது தொடர்பாக பெற்றோரிடம் பேசினார்.கூட்டதில் தேசிய திறன் வழி தேர்வில் 3 மாணவர்கள் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கபட்டது .மாணவ,மாணவியர் விடுமறை எடுக்காமல் பள்ளிக்கு தொடர்ந்து வரவேண்டும் என கேட்டுகொள்ளபட்டது.அதற்கு பெற்றோர் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுகொள்ளபட்டது.
நிகழ்ச்சியில் திருக்குறளை இசையோடு நடனமாடும் நிகழ்ச்சி மாணவிகளால் நடத்தப்பட்டது.7 ம் வகுப்பு மாணவி தனம் ஒழுக்கத்தை பற்றி ஆங்கிலத்தில் எடுத்து கூறினார்.4 ம் வகுப்பு மாணவி காயத்திரி பொதுவான கருத்துக்களை எடுத்து கூறினார்.8 ம் வகுப்பு கிருஷ்ணவேணி ஒரு கதையை ஆங்கிலத்திலும் ,2 ம் வகுப்பு மாணவி கீர்த்தியா தமிழிலும் அழகாக கூறினார்கள்.8 ம் வகுப்பு மங்கையர்க்கரசி,நவீன்,நடராஜன் ஆகியோர் ஆங்கிலத்தில் உரையாடல் நடத்தி பெற்றோரை அதிசயத்தில் ஆழ்த்தினார்கள்.8ம் வகுப்பு மாணவி சொர்ணாம்பிகா பள்ளியில் தான் இது வரை பெற்ற அனைத்து சான்றிதல்களையும் விரிவாக ஆங்கிலத்தில் எடுத்து கூறினார்.
பள்ளி அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்க்கு பெற்றோர்கள் அழகுராசு,மீனாள் ,காயத்ரி உட்பட பல பெற்றோர் பரிசுகளை வழங்கி கருத்துக்களை கூறினார்கள்.ஆசிரியை செல்வ மீனாள் ,ஆசிரியர் ஸ்ரீதர் ,ஆசிரியை முத்து மீனாள் ஆகியோர் மாணவர்கள் தொடர்பாகவும்,பெற்றோர்கள் செய்ய வேண்டியது தொடர்பாகவும் விளக்கி கூறினார்கள்.ஆசிரியை வாசுகி தொகுத்து வழங்கியதுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் .மாணவன் ரஞ்சித்நன்றி கூறினார்.
பட விளக்கம் : IMJ -1764 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சியில் மீனாள் என்ற பெற்றோர் விநாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மங்கையர்க்கரசி என்ற மாணவிக்கு பரிசு வழங்கினார்.உடன் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாமலை, தேவகோட்டை பாண்டியன் கிராம வங்கியின் முது நிலை மேலாளர் சௌந்தர பாண்டியன்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.
பட விளக்கம் : IMJ - 1748,1776 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சியில் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment