Saturday, 31 December 2016

புதைந்து கிடைக்கும் திறமைகளை 
வெளி கொண்டு வருபவரே ஆசிரியர் 

கல்லூரி முதல்வர் பேச்சு 
விடுமுறை கால 5 நாள் இலவச பயிற்சி முகாமின் நிறைவு நாள்விழா 


தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை கால 5 நாள் இலவச பயிற்சி முகாமின் நிறைவு நாள்விழா நடைபெற்றது.


Friday, 30 December 2016

                      ஓரிகாமி பயிற்சி 

 குதிக்கும் தவளை ,குருவி,தொப்பி ஆகியவற்றை நியூஸ் பேப்பர்,வெள்ளை தாள் கொண்டு செய்து மகிழ்ந்த மாணவர்கள்

 விடுமுறை கால இலவச பயிற்சி முகாமில் நான்காம்  நாள் நிகழ்வவு 

 

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை கால இலவச பயிற்சி முகாமில் நான்காம்  நாள் நிகழ்வில் தாங்களே குதிக்கும் தவளை ,குருவி,தொப்பி ஆகியவற்றை  செய்து மாணவர்கள் மகிழந்தனர்.

Thursday, 29 December 2016



பருப்பு சாப்பிடுவதால் உடல் குண்டாகாது

அரசு மருத்துவர் தகவல்



விடுமுறை கால இலவச பயிற்சி முகாமில் மூன்றாம் நாள் நிகழ்வில்

அரசு மருத்துவருடன் மாணவர்கள் கலந்துரையாடல்


தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பயிற்சி முகாமில் பருப்பு சாப்பிடுவதால் உடல் குண்டாகாது என அரசு மருத்துவர் பேசினார்.

Wednesday, 28 December 2016

   முதல் முறையாக தென் தமிழகத்தில் இது போன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் முதன் முறையாக 5 நாள் இலவச பயிற்சி வகுப்பு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்காக நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.                     விடுமுறை நாளாக இருந்த போதிலும்   பல்வேறு பள்ளிகளில் இருந்தும்,எங்கள் பள்ளியில் இருந்தும் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் இரண்டாவது நாள் தொடர் பயிற்சியில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

விடுமுறை கால இலவச பயிற்சி வகுப்பின் இரண்டாம் நாள் நிகழ்வு 


 செய்தி தாளில் ஆல்பம் தயாரித்தல் பயிற்சி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை கால இலவச பயிற்சி வகுப்பின் இரண்டாம் நாள் நிகழ்வாக செய்தி தாளில் ஆல்பம் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.

Tuesday, 27 December 2016

மாணவர்கள் திறமைகளை வளர்த்து கொள்ள
பயிற்சிகள் அவசியம்

நகராட்சி ஆணையாளர் பேச்சு

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 5 நாள் இலவச விடுமுறை கால பயிற்சி முகாமை தேவகோட்டை  நகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.


Saturday, 24 December 2016

இந்த மாத சுட்டி விகடனில் தங்கள் படம் வந்துள்ளதை ஆர்வத்துடன் பார்க்கும்,படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ , மாணவியர் . பள்ளியிலேயே 7மாணவர்களுக்கு ஆசிரியர் சார்பில் புத்தகங்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

Tuesday, 20 December 2016




எட்டாம் வகுப்பு மாணவ,மாணவிகள்  அறிவியல் ஆய்வக களப்பயணம்
 
                     தேவகோட்டை -   தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள்  கல்லூரி ஆய்வகங்களுக்கு  அறிவியல் ஆய்வக களப்பயணம் மேற்கொண்டனர்.இப்பள்ளி  8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொடர்ந்து நான்காம்  ஆண்டாக கல்லூரி ஆய்வக சோதனை கூடங்களுக்கு நேரில் களப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 16 December 2016

வாழ்க்கைக்கு உதவவும்  கல்வியே சிறந்த கல்வி

ஜெர்மன் நாட்டு அறிஞர் பேச்சு


தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டை சார்ந்த அறிஞரும்,தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர்.

Wednesday, 14 December 2016

நாளிதழ்களில் செய்திகளை படிப்பது சுகமான அனுபவம்

பத்திரிக்கை ஆசிரியர் பேச்சு

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பத்திரிக்கை ஆசிரியருடன் மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது.

Monday, 12 December 2016

தினமலர் பட்டம் ( 12/12/2016) நாளிதழில் இன்று தமிழகம் முழுவதும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கலர் படம் மற்றும் செய்தி வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள்.



சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் மாணவ,மாணவியர்


          இந்த மாத சுட்டி விகடனில் தங்கள் படம் வந்துள்ளதை ஆர்வத்துடன் பார்க்கும்,படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ , மாணவியர் . பள்ளியிலேயே 13மாணவர்களுக்கு ஆசிரியர் சார்பில் புத்தகங்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.




Friday, 9 December 2016

தினமலர் நாளிதழின் பரிசு ரூபாய் 1000 பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி 

Thursday, 8 December 2016

தமிழகம் முழுவதும் தினமலர் நாளிதழின் சிறுவர் மலர் புத்தகத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவியின்  சாதனைகளை நாளை 09/12/2016 இதழில் காணுங்கள்.

சுட்டி விகடனின் ஜப்பான் புத்தர் கோவில்
சுட்டி கிரியேசன்ஸ் ஜப்பான் புத்தர் கோவில் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

சுட்டி விகடன் இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான ஜப்பான் புத்தர் கோவில் வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .

Sunday, 4 December 2016

தினமலர் பட்டம் இதழில் தமிழ்நாடு முழுவதும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செயல்பாடு வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள்

Friday, 2 December 2016

  தி இந்து ஆங்கில நாளிதழின் ஓவிய போட்டியில் பங்கேற்று தேர்வான  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு 

Thursday, 1 December 2016

 உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்

அறிகுறியே இல்லாத நோய் எய்ட்ஸ் நோய் 

 எய்ட்ஸ் பாதிப்பு அதிக அளவில் மனிதர்கள் இடம்பெயரும் இடங்களில் காணப்படுகிறது 

தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆற்றுப்படுத்துனர் தகவல் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டது.
தமிழ் இலக்கிய பேரவை போட்டியில்  வெற்றி பெற்ற மாணவிக்கு  பள்ளியில் பாராட்டு
தேவகோட்டை- தேவகோட்டைசேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தமிழ் இலக்கிய பேரவை நடத்திய பேச்சு போட்டியில் வெற்றி பெற்றதற்கு பள்ளியில் பாராட்டுவிழா நடைபெற்றது.

Saturday, 26 November 2016

தேசிய குழந்தைகள் அறிவியல் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு விழா
வாழ்வியல் முறைகளும்,நோய்களும் தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்பித்தல்
செட்டிநாடு வீடுகளை பழமை மாறாமல் பாதுகாத்தல் தொடர்பான ஆய்வு கட்டுரை சமர்பித்தல்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேசிய குழந்தைகள் அறிவியல் போட்டியில் பங்கேற்று சான்றிதள் மற்றும் மெடல் பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

Wednesday, 23 November 2016

வீட்டை நினைத்து கொண்டு சாலையில் பயணப்படாதீர்  
சாலை பாதுகாப்பு ஒரு வாக்கியம் அல்ல ! வாழ்க்கையின் வழி !
போக்குவரத்து ஆய்வாளர் அறிவுரை

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வில் வீட்டை நினைத்து கொண்டு சாலையில் பயணப்படாதீர் என போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேசினார்.

Tuesday, 22 November 2016

பொள்ளாச்சி நசன் அவர்களின் தமிழ் எளிமையாக கற்பித்தல் என்பது தொடர்பான யு tube வீடியோவை இன்று பள்ளியில் தொலைகாட்சி வாயிலாக ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும் விளக்கி எடுத்து கூறியபோது 


சுட்டி விகடனின் ரோல்ஸ் ராய்ஸ் கார்
சுட்டி கிரியேசன்ஸ் ரோல்ஸ் ராய்ஸ் கார் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

சுட்டி விகடன் இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான ரோல்ஸ் ராய்ஸ் கார் வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .
இந்த மாத சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
ஆசிரியர்களே மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்கி கொடுத்துள்ளனர்.

ராசியான பள்ளிக்கூடம் ,நல்ல பள்ளிக்கூடம்

இந்நாள் மாணவர்களை சந்தித்த முன்னாள் மாணவர்கள் 

Monday, 21 November 2016

எல்.ஈ.டி., எல்.சி.டி.,என்பது என்ன ?
தொடர் இணைப்பு ,பக்க இணைப்பு எவ்வாறு செயல்படுகிறது ?

அறிவியல் நேரடி விளக்கம் மூலம் செய்து காண்பித்தல்

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் மூலம் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.


Saturday, 19 November 2016

                                                    உலக கழிவறை தினம் 

இல்லங்கள் தோறும் கழிவறை சுகாதாரத்தின் அடிப்படை

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக கழிவறை தினத்தினை முன்னிட்டு  கழிவறை கோப்பை மூலம்  கழிவறை முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

Friday, 18 November 2016

தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி 

Wednesday, 16 November 2016

மத்திய அரசின் காரைக்குடி மத்திய  மின் வேதியியல் ஆய்வகம் ( சிக்ரி ) பவள விழாவில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்க்கு பாராட்டு

மத்திய அரசின் காரைக்குடி மத்திய  மின் வேதியியல் ஆய்வகம் ( சிக்ரி ) பவள விழாவில் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு


Saturday, 12 November 2016

அனைவரும் ஏதாவது ஒரு வகையில் விவசாயம் செய்யுங்கள்
விவாசய கல்லூரி டீன் பேச்சு

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற  தேசிய கல்வி நாள் விழாவில் அனைவரும் ஏதாவது விவசாயம் செய்யுங்கள் என்று டீன் பேபி ராணி பேசினார்.

Friday, 11 November 2016

பழசுக்கு புதுசு – மாணவர்களுக்கு ரூபாய் நோட்டு விளக்க கூட்டம்

பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றுவது எப்படி ?

மாணவர்களிடம் விளக்குதல்

தேவகோட்டை- தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அரசு செல்லாது என்று அறிவித்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய நோட்டுக்களை பெறுவது குறித்து மாணவர்களிடம் விளக்க கூட்டம் நடைபெற்றது.

Wednesday, 9 November 2016

மத்திய நிலத்தடி நீர் வாரியம் போட்டிக்கு பள்ளி அளவிலான தகுதி தேர்வு 
                              
                 தேவகோட்டை -    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் நீர் வாரியத்தால் நடத்தப்படவுள்ள போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.

Saturday, 5 November 2016

 கந்தர் சஷ்டி விழாவில் அரசு உதவி பெறும் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் 
தேவகோட்டை - தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் கண்கவர் நிகழ்ச்சியாக மிக பெரிய மேடையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

                       71 ஆம் ஆண்டாக நடைபெற்று வரும் தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் மிகப்பெரிய மேடையில் சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில்  கலை நிகழ்ச்சிகள் 
 வரவேற்புரையுடன் துவங்கி பரதநாட்டியம் ,ஓம் சரவணபவ நடனம்,முருகன் அடிமை பேச்சு,செல்ல குழந்தைகள் நடனம்,லார்டு முருகா ஆங்கில பேச்சு ,மாரியம்மன் கரக நடனம்,நம்பிக்கை பேச்சு,அலை பேசியால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வண்ணம் மௌன நடிப்பு,தி டிஸ் ஹானஸ்ட் ஜட்ஜ் ஆங்கில நாடகம் ,உழவர் நடனம்,யோகம் தரும் யோகா , நிலவுக்கே சென்று வந்தது போன்ற நிலவு நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.ஒரு மணி நேரத்திற்கும் மேலான கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவிகள் 6ம் வகுப்பு ராஜி,7ம் வகுப்பு ஜெனிபர் ஆகியோர் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம் : தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் கண்கவர் நிகழ்ச்சியாக மிக பெரிய மேடையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Friday, 4 November 2016

“சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா
மிஸ் பண்ணிடாதீங்க ... வருத்தப்படுவீங்க ....

கலைநிகழ்ச்சிகள்
இன்றைய நிகழ்ச்சி : 05-11-2016

நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.

நாள் : 05-11-2016
நேரம் : மாலை 6-00 மணி 
 
 

Thursday, 3 November 2016

திருப்புகழில் கண்கொடுத்த கண்ணப்பர் என்கிற தலைப்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி கந்த சஷ்டி விழாவில் பேசிய வீடியோ காட்சி

திருப்புகழில் கண்கொடுத்த கண்ணப்பர் என்கிற தலைப்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி கந்த சஷ்டி விழாவில் பேசிய வீடியோ காட்சி

மனிதர்களில் நான்கு வகை என்கிற தலைப்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி ராஜேஸ்வரி கந்த சஷ்டி விழாவில் பேசிய வீடியோ காட்சி

மிகபெரிய மேடையில் தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவிகள் இன்று மாலை 5.30 மணி அளவில் கீழ்க்கண்ட தலைப்புகளில் பேச உள்ளனர்.
1) க.ராஜி
பொருள் : வெற்றி நம்கையில்

2 ) மு.தனலெட்சுமி
பொருள் ; திருப்புகழில் கண்கொடுத்த கண்ணப்பர்
3 ) மு.ராஜேஸ்வரி
பொருள் : மனிதர்களில் நான்கு வகை

அனைவரும் வருக.

Wednesday, 2 November 2016

சுட்டி விகடனின் அழகான வீடு  

சுட்டி கிரியேசன்ஸ் அழகான வீடு  வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு 

 

          சுட்டி விகடன்  இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான அழகான வீடு  வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .

தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியரின் இறைவணக்க பாடல் பாடிய காட்சி 
 
இன்றைய தினகரன் பத்திரிக்கையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பான செய்தி கலர் படத்துடன் வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள்.
 Displaying image.png

ஜெர்மன் சுபாஷினி அவர்கள் தனது முகநூலில் பள்ளியை பாராட்டுதல் மற்றும் பள்ளிக்கு விரைவில் வருகை தருவதை அன்புடன் வரவேற்றல்


ஜெர்மனி தமிழ் மரபு அறக் கட்டளை

செயலாளரும்,கல்வெட்டு ஆராய்ச்சியாளரு

மான  மலேசியாவை சார்ந்த சுபாஷினி

ட்ரெம்மல்  அவர்கள் சிவகங்கை மாவட்டம்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்

அரசு உதவி  பெறும் நடுநிலைப் பள்ளி

செயல்பாடுகளை பாராட்டி    தனது

முகநூலில் பதிவிட்ட தகவல் பின்வருமாறு :

             

கேள்வி கேட்டால் தவறு என சொல்லி சொல்லி வளர்த்த சூழலில் கேள்விகளே கேட்காமல் சொன்னவற்றை சுய நிந்தனையின்றி ஏற்றுக் கொள்ளும் குழந்தைகள் நிலை மிகப் பரிதாபமானது. அவர்கள் சிந்திக்கவே பயப்படுவார்கள்.
சென்ற ஆண்டு டிசம்பரில் நான் தேவகோட்டை சேர்மன் மாணிக்கம் அரசு பள்ளிக்குச் சென்றிருந்தேன். அங்கு சந்தித்த மாணவர்கள் மிக சுறுசுறுப்பனாவர்கள் என்பதோடு சொன்ன தகவல்களைக் கவனத்துடன் கேட்டு எனது உரைக்கு ஏற்ற வகையில் கேள்விகளைக் கேட்டார்கள். ஒருவர் விட்டு ஒருவர் என ஆர்வத்துடன். இவர்களின் மேல் ஏற்பட்ட ஆரவத்தினால் ஜெர்மனி திரும்பும் முன் மீண்டும் ஒரு முறை சென்றிருந்தேன். இந்த ஆண்டும் இந்த மாணவர்களைச் சந்திக்க 1/2 நாள் எனது தமிழகப் பயணத்தில் ஒதுக்கியுள்ளேன். அருமையான மாணவ்ர்கள். அருமையான ஆசிரியர்கள். குறிப்பாகத் தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கம் மிகப் பாராட்டுதலுக்குறியவர்.”

இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் ஜெர்மன் சுபாஷினி அவர்கள்  பதிவிட்டுள்ளார்.



பள்ளியின் சார்பாக ஜெர்மன் சுபாஷினி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நன்றி.
உங்களின் பார்வைக்கு முகநூல் பதிவு.



Monday, 31 October 2016

மாநில போட்டிக்கு தேர்வு
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி  போட்டியில் வெற்றி
தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி  மாவட்ட அளவிலான அறிவியல்  கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்று மெடல்,விருதுடன் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றதற்கு பள்ளியில்  பாராட்டு விழா நடைபெற்றது.

Saturday, 29 October 2016

தினமலர் பட்டம் நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தொடர்பான படம் மற்றும் கணிதம் தொடர்பான கேள்வி வெளியாகி உள்ளது .அனைவரும் காணுங்கள் .

Wednesday, 26 October 2016

பாதுகாப்பான  தீபாவளி கொண்டாடுவது எப்படி? 
தீயணைப்பு  அதிகாரி நேரடி  செயல் முறை விளக்கம் 

பாதுகாப்பாக பட்டாசுகளை  வெடிப்பது எப்படி ? 

      தேவகோட்டை -  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? பட்டாசுகளை வெடிப்பது எப்படி? என தேவகோட்டை   தீயணைப்பு  அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு  நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.

Tuesday, 25 October 2016

திருமுருகாற்றுப்படை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருமுருகாற்றுப்படை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Monday, 24 October 2016

தினமலர் பட்டம் பரிசுகள் வழங்குதல்

மாநில அளவில்  நடைபெற்ற இப்போட்டியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்  அளவில் வெற்றி பெற்றுள்ள ஒரே மாணவி பரமேஸ்வரி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது
மாநில்அளவில் கனவு ஆசிரியர்

போட்டியில் வெற்றி பெற்றதற்கு

தினமலர் சார்பாக பரிசு வழங்குதல்

மாணவி மகிழ்ச்சி 

Tuesday, 18 October 2016

குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி ?

மொழி வல்லுனராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்று தரவேண்டும் என்பதே எனது குறிக்கோள் என பத்து வயது மாணவர் பேச்சு 

400 மொழிகள் அறிந்த இஸ்ரேலில் பயிலும்  10 வயது மாணவர் பயற்சி அளித்தல்

இயற்கை உணர்வு மூளை வளர்ச்சியை அதிகரிக்கும்

கேழ்வரகு ,சாமை,சோளம்,கம்பு,குதிரைவாலி போன்ற இயற்கை உணவை உண்பதால் எந்த நோயும் அண்டவில்லை

இதுவரை தனது குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என மருத்துவமனை சென்றது கிடையாது என தகவல்

சர்க்கரையை தவிர்த்து , இனிப்புகளையும் தவிர்த்து இளம் வயது வாழ பழகி கொள்ளுங்கள்

சீதாப் பழம்,கொய்யா பழம்,சப்போட்டா பழம் அதிகம் சாப்பிடுங்கள் என வேண்டுகோள்

வாழ்க்கைக்கு ஐந்து மொழிகளும்,வாழ்வதற்கு ஆறு  மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும் என தகவல்

கதைகளின் மூலம் மாணவர்களுக்கு அதிகமான பாடங்களை சொல்லி கொடுங்கள் என ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்

பதினைந்து ஆண்டுகளில் இருபத்தி எட்டு நாடுகள் சுற்றி ஆராய்ட்சி செய்த
உளவியாளரும், பன்மொழி அறிஞருமான மொழிப் பிரியன் பேச்சு

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி ? என்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது.