உலக சுற்றுச்சூழல் தினம்: மாணவர்கள் பங்கேற்புடன் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி
WELCOME TO KALVIYE SELVAM
உழைப்பே உயர்வு
Friday, 5 June 2026
Wednesday, 3 June 2026
Tuesday, 2 June 2026
Monday, 1 June 2026
Sunday, 31 May 2026
பொதுமக்களின் நலன் கருதி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – பயணிகள் கோரிக்கை
திருச்சி:
திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் (பஞ்சப்பூர் பேருந்து நிலையம்) செயல்பாட்டிற்கு வந்த பிறகு, அங்கு நேரில் செல்லும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாநகரின் மையப்பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை அடைய 25 நிமிடங்களுக்கு மேல் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் கூறுகின்றனர். இதனால் தேவையற்ற நேர விரயமும், எரிபொருள் செலவும் அதிகரித்துள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்திய பிரதமர் உள்ளிட்ட பலர் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைத்து, எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், திருச்சி மாநகரிலிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களும் பேருந்துகளும் தினமும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு சென்று வருவதால் அதிக அளவில் எரிபொருள் வீணாகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பயணத்தின் போது சந்தித்த கார் ஓட்டுநர் ஒருவர், மாத்தூர் ரவுண்டானா அருகிலுள்ள பைபாஸ் சாலைப் பகுதியில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் தொடங்கப்படுவதற்கு முன்பு சதுர அடி நிலத்தின் விலை ரூ.200 அளவில் இருந்ததாகவும், தற்போது அது ரூ.4,000 வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால், சிலரின் நலனுக்காகவே இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதாக பொதுமக்களிடையே கருத்து நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தாங்கள் பயணித்த பேருந்தின் நடத்துநரும், தேவையில்லாமல் கூடுதல் தூரம் இயக்கப்படுவதால் எரிபொருள் செலவு மற்றும் நேர விரயம் அதிகரிப்பதாக தெரிவித்ததாக பயணிகள் கூறுகின்றனர்.
எனவே, பொதுமக்களின் நலன், அரசின் நிதி சிக்கனம் மற்றும் நாட்டின் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்து, மீண்டும் மத்திய பேருந்து நிலையத்தை முக்கியப் பேருந்து நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களின் நலன் கருதி இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
“விசேஷங்களுக்கு செல்வது விருந்துக்காக அல்ல; உறவுக்காக!”
திருமணம், புதுமனை புகுவிழா போன்ற குடும்ப விசேஷங்களுக்கு நாம் செல்லும்போது, அந்த நிகழ்வில் வழங்கப்படும் உணவு அல்லது ஏற்பாடுகளை மதிப்பிடுவதற்காக அல்ல; உறவுகளைப் பேணவும் வளர்க்கவும் என்பதற்காகவே செல்ல வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் பலர், “சாப்பாடு நன்றாக இருந்தது”, “சாப்பாடு சரியாக இல்லை”, “அவர்கள் இப்படிச் செய்தார்கள், அப்படிச் செய்தார்கள்” என்று நிகழ்வுகளைப் பற்றிக் குறை கூறுவது வழக்கமாகிவிட்டது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய நடைமுறையாகும்.
ஒரு திருமணமோ, கிரகப்பிரவேசமோ அல்லது வேறு எந்த குடும்ப நிகழ்வோ நடத்துவது எளிதான காரியம் அல்ல. பல்வேறு சிரமங்களையும், பொருளாதாரச் சுமைகளையும், சில நேரங்களில் கடன்களையும் எதிர்கொண்டு, பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகே அந்த நிகழ்வுகளை நடத்த முடிகிறது.
அத்தகைய நேரங்களில், நம்மால் இயன்ற உதவிகளை கையால், உடலால் அல்லது வார்த்தைகளால் செய்தால் அது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். “நிகழ்ச்சி மிகவும் நன்றாக நடைபெற்றது”, “நீங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளீர்கள்” போன்ற ஒரு நல்ல வார்த்தைகூட அவர்களின் மனதிற்கு உற்சாகத்தையும் ஆறுதலையும் தரும்.
அதை விடுத்து, உணவு சரியில்லை, வந்தவர்கள் சரியில்லை, போனவர்கள் சரியில்லை என்று விமர்சனம் செய்வது உறவுகளை வலுப்படுத்தாது; மாறாக மனவருத்தத்தையே ஏற்படுத்தும்.
நாம் இவ்வாறான விசேஷங்களுக்கு செல்வது உணவு உண்பதற்காக அல்ல; உறவுகளை மதித்து, அவர்களுடன் நமது பாசப் பிணைப்பைத் தொடர்வதற்காகத்தான். எனவே, இனிவரும் காலங்களில் குடும்ப விசேஷங்களில் கலந்துகொள்ளும்போது, குறைகளைத் தேடாமல், உறவுகளை மேம்படுத்தவும், இயன்ற உதவிகளைச் செய்யவும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பகிரவும் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்.
அவ்வாறு நடந்துகொண்டால், குடும்ப உறவுகளும் சமூக நல்லிணக்கமும் மேலும் வலுப்பெறும்.
நன்றிகளுடன்,
லேனா, காரைக்குடி.
திருமணம், புதுமனை புகுவிழா போன்ற குடும்ப விசேஷங்களுக்கு நாம் செல்லும்போது, அந்த நிகழ்வில் வழங்கப்படும் உணவு அல்லது ஏற்பாடுகளை மதிப்பிடுவதற்காக அல்ல; உறவுகளைப் பேணவும் வளர்க்கவும் என்பதற்காகவே செல்ல வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் பலர், “சாப்பாடு நன்றாக இருந்தது”, “சாப்பாடு சரியாக இல்லை”, “அவர்கள் இப்படிச் செய்தார்கள், அப்படிச் செய்தார்கள்” என்று நிகழ்வுகளைப் பற்றிக் குறை கூறுவது வழக்கமாகிவிட்டது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய நடைமுறையாகும்.
ஒரு திருமணமோ, கிரகப்பிரவேசமோ அல்லது வேறு எந்த குடும்ப நிகழ்வோ நடத்துவது எளிதான காரியம் அல்ல. பல்வேறு சிரமங்களையும், பொருளாதாரச் சுமைகளையும், சில நேரங்களில் கடன்களையும் எதிர்கொண்டு, பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகே அந்த நிகழ்வுகளை நடத்த முடிகிறது.
அத்தகைய நேரங்களில், நம்மால் இயன்ற உதவிகளை கையால், உடலால் அல்லது வார்த்தைகளால் செய்தால் அது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். “நிகழ்ச்சி மிகவும் நன்றாக நடைபெற்றது”, “நீங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளீர்கள்” போன்ற ஒரு நல்ல வார்த்தைகூட அவர்களின் மனதிற்கு உற்சாகத்தையும் ஆறுதலையும் தரும்.
அதை விடுத்து, உணவு சரியில்லை, வந்தவர்கள் சரியில்லை, போனவர்கள் சரியில்லை என்று விமர்சனம் செய்வது உறவுகளை வலுப்படுத்தாது; மாறாக மனவருத்தத்தையே ஏற்படுத்தும்.
நாம் இவ்வாறான விசேஷங்களுக்கு செல்வது உணவு உண்பதற்காக அல்ல; உறவுகளை மதித்து, அவர்களுடன் நமது பாசப் பிணைப்பைத் தொடர்வதற்காகத்தான். எனவே, இனிவரும் காலங்களில் குடும்ப விசேஷங்களில் கலந்துகொள்ளும்போது, குறைகளைத் தேடாமல், உறவுகளை மேம்படுத்தவும், இயன்ற உதவிகளைச் செய்யவும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பகிரவும் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்.
அவ்வாறு நடந்துகொண்டால், குடும்ப உறவுகளும் சமூக நல்லிணக்கமும் மேலும் வலுப்பெறும்.
நன்றிகளுடன்,
லேனா, காரைக்குடி.







