Friday, 24 April 2026

 [25/04, 9:24 am] jeyamchok: வாக்குச்சாவடியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களும் அவை கடந்து வாக்குப்பதிவு பணியை நல்ல முறையில் நடத்திக் கொடுத்த அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும் கூறி எழுத்தாளர் Kavitha Bharathy எழுதியிருந்த பதிவை காலையில் படித்தேன். யாருமே பேசாத ஒன்றை ஐயா பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 


முன்பின் தெரியாத ஊர், உடைமாற்ற, குளிக்க வசதி இல்லாத கட்டிடங்கள், தூக்கமற்ற இரண்டு நாள் இரவுகள்‍, தேர்தல் பணி முடிந்து சாமத்தில் திக்கு திசை தெரியாத இடத்திலிருந்து வீடு திரும்ப வேண்டிய கட்டாயம்,  இதையெல்லாம் தாண்டி தேர்தல் பணியில் இருக்கும் சிரமங்களை கூற விரும்புகிறேன். 


தேர்தல் அமைதியான முறையில் நடைபெற mock poll தான் முதல் படி. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பிக்க 5.30 மணிக்கே  வாக்குச்சாவடி முகவர் (Booth Agent ) வைத்து mock poll நடத்த வேண்டும். ஏஜென்ட்கள் பெரும்பாலும் முந்தைய நாளே வருவதில்லை. காலை ஐந்து மணிக்கு மேல் வந்து அவர்களுக்கான ஃபார்ம், ஐடி கார்டை பெறுவதற்கே ஐந்தரை கடந்து விடும். சில இடங்களில் பூத் ஏஜென்ட்கள் அதிகாரிகளை விட மிகவும் கிடுக்குப்பிடியானவர்களாக இருப்பார்கள்.  அவர்களுக்கு எழும் சந்தேகங்களை தெளிவுபடுத்தி மாக்‌ போல் கிளியர் செய்து மிஷினை சீல் வைத்து 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பிப்பதற்குள் ஒரு யுகம் கடந்து போகும். 


வாக்குப்பதிவு தொடங்கிய பின்னும் ஏதாவது ஒரு விதத்தில் பதட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும் 


ஓட்டு போட வந்திருக்கும் நபருக்கும் அவர் கையில் இருக்கும் ஐடி க்கும் சம்பந்தமே இருக்காது. பல் போன பாட்டி கையில் ரெட்டை ஜடை போட்டோ உள்ள ஓட்டர் ஐடி இருக்கும். 20 வயது இளைஞன் கருப்பு வெள்ளை போட்டோவை பார்த்து நிமிர்ந்து பார்த்தால் கையில் குச்சி பிடித்து தாத்தா நின்று கொண்டிருப்பார். அனைத்தும் 30,40 வருஷத்துக்கு முந்தைய போட்டோக்கள். அதுவாவது

வயதானவர்கள் என்பதால் கூட தெரியாது என்று அவர்களை ஏற்றுக் கொள்ளலாம். 


 இப்ப உள்ள 2கே குழவிகள் ஓட்டர் ஐடி எடுத்து வருவாங்க.. நாலாவது படிக்கிறப்ப உள்ள போட்டோ வச்சு. தேர்தல் ஆணையம் ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் , பேங்க் பாஸ்புக் அப்படின்னு 16 வகையான அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள் கொடுத்திருக்காங்க.. எதுக்காக போட்டோ ஐடி வெரிஃபை பண்ணுவாங்கன்னு சிலபடித்தவர்களுக்கு கூட தெரிவதில்லை.. ஏதோ ஒரு ஐடினு எடுத்து வராங்க.


 இத கூட ஒரு விதத்தில் சேர்த்துக்கலாம் .

வெறும் பூத் சிலிப்போட சிலர்,

ஒரிஜினல் எடுத்து வராம ஐடி ஜெராக்ஸோட சிலர், 

ஐடி போன்ல இருக்குன்னு சிலர், இவங்களையெல்லாம் போயிட்டு ஐடி எடுத்துட்டு வாங்க னு சொன்னா  திரும்பி ஓட்டு போட வர மாட்டாங்க.. அதனால முடிஞ்ச வரைக்கும் திருப்பி அனுப்பாம ஏஜென்ட் கிட்ட கேட்டு  வெரிஃபை பண்ணிக்கிட்டு ஓட்டு போட வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்..


 பாட்டிய கூட்டி வரேன்,  தாத்தாவை கூட்டி வரேன்னு அவங்களுக்கு கண்ணு தெரியாது  நான் தான் சின்னத்துல கைவைச்சு கொடுக்கணும் னு  ஒரே ஆள் தொடர்ந்து வருவாரு.. அவரை சமாளிக்கணும்.. நேத்துலாம் எங்க பாட்டிக்கு நான் தான் ஓட்டு போடணும் னு 12 வயசு பையன் வந்து நிக்கிறான் அடேய் நீ யாருன்னு தெரியும்டா  னு சொல்லி உங்க வீட்டில் உள்ள பெரியவங்கள கூட்டிட்டு வா னு அதுக்குள்ள ஃபார்ம் எழுதி வாங்கி தான் ஓட்டு போட வைக்கணும். 


இதுக்கெல்லாம் ஏஜென்ட்களோட ஆப்போசிங் இருந்தா சரியான நடைமுறை கூட அமைதியான முறையில பண்ண முடியாது.


எவ்வளவோ நம்ம நாடு வளர்ச்சி அடஞ்ச பிறகும் கூட பட்டனை அழுத்துன உடனே சவுண்ட் வர மெஷினை கண்டுபிடிக்க முடியல போல..  beep sound வர வரைக்கும் ஓட்டர நிறுத்தி வைக்கணும்.. சிலர் மை வச்சுட்டா ஓட்டு போடுற வேலை முடிஞ்சுதுன்னு ஓட்டு போடாமல் மறந்து கூட போயிடுவாங்க.  எல்லாரும் ஓட்டு போடுறாங்களான்னு கண்கொத்தி பாம்பா பாக்கணும். 


பூத்துக்குள்ள சிசிடிவி கேமரா, 10 ஏஜென்ட் , நாலு போலிங் ஆபீஸர் இருந்தாலும் கண் அசர நேரத்துல சில ஆர்வக்கோளாறுகள் ஃபோன உள்ள எடுத்துட்டு வந்து போட்டோ வீடியோ எடுக்க முயற்சி செய்வாங்க. அது மாதிரி நடந்துராம கவனமா இருக்கணும் .


போலிங் ஆபிசர் ஒருத்தர் கவனக்குறைவா இருந்தாலும் counting மிஸ் மேட்ச் ஆகும் அதுக்கெல்லாம் இடம் தராமல் வேலை பார்க்கணும் .


இதெல்லாம் தவிர ஒரு சிலர் நான் போட்ட ஓட்டு இல்லாம வேற சின்னம் இருந்த சீட்டு தான் விழுந்துச்சுன்னு சண்டை போட வருவாங்க .. 

கட்சி துண்டு போட்டு பூத்துக்குள்ள வருவாங்க,

என் ஓட்ட யாரோ போட்டாங்கன்னு பிரச்சனை பண்ணுவாங்க..

அடுத்த பூத்ல ஓட்ட வச்சிட்டு இவ்ளோ நேரம் லைன்ல நின்னு இங்க எனக்கு ஓட்டு இல்லையான்னு பிரச்சினை பண்ணுவாங்க.. 

இதெல்லாம் சரி பண்ணி தான் வாக்கு பதிவு நடத்தணும்...


நேத்து நான் வேலை பார்த்த பூத்ல 1020 ஓட்டு.. 

ரெஸ்ட் ரூம் போக கூட ரெண்டு நிமிஷம் கிடைக்கல..

பிஸியான நேரத்துல கூட எந்த பிரச்சினையும் வந்துடாம வேலை பாக்கணும்.


அது தவிர பூத் க்கு அப்பாய்ன்ட் பண்ணின பிரசிடிங் ஆபீர்ஸ பெரிய பதவில இருக்கவங்களா மட்டும் போடாம, அவங்க இந்த வேலை பாக்குறதுக்கு உடல், மன தகுதி உடையவரா னு பார்த்து போட்ருக்கணும். சில இடங்களில் தேர்தல் பணிக்கு ஆள் இல்லாம பயிற்சி குறைவா இருக்கிறவங்களை போட்டுட்டாங்கனா, ‌ அவங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கிற மூணு பேரும் எல்லா பொறுப்புகளையும் ஏத்துக்க தயாராகிறணும் ..


போலிங் முடிச்சு  ரிஜிஸ்டர் , போலிங் கவுண்டு, ஏஜென்ட் காப்பி எல்லாம் மேட்ச் ஆகணும். மேட்ச் ஆனோன ஏஜென்ட் வெச்சுட்டு மெஷின் சீல் பண்ணிட்டு கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு bunch of forms ah முடிச்சு வெச்சிட்டு Zonal officer வர வழியை பார்த்து காத்து கெடக்கலாம்.. 


Counting match ஆகலன்னா...

இருந்தா பூமிக்கு..

இல்லன்னா சாமிக்கு னு இருந்திர வேண்டிதுதான்.


❣️ முகநூலில் வந்த பதிவு பார்வர்ட் செய்யப்பட்டுள்ளது

[25/04, 9:25 am] jeyamchok: பயிற்சி வகுப்புகளிலேயே நான் கவனித்தேன்.எங்கள் team leader வகுப்பை கவனிக்காமல் தூங்கிக் கொண்டு இருந்ததை.


டீமில்  இருந்த இன்னொரு பெண் நோயாளி...பணிக்குப் புதியவர் வேறு...


மீதம் நானும் இன்னொரு பட்டதாரி ஆசிரியரும் தான். எங்கள் இருவருக்கும் அப்போதே கிலி பிடித்து விட்டது.ரிசர்வில் வந்துவிட்டால் கூட பரவாயில்லை என்று வேண்டுதல் வைக்கும் அளவுக்கு பயந்து போய் விட்டோம். அதற்கும் வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததும் இருந்த கடைசி நம்பிக்கையும் பொய்த்துப் போனது.


தவிர்க்கவோ தப்பிக்கவோ எந்த வழியும் இல்லை என்றானதும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தேர்தல் பணிக்கு ஆயத்தமானோம்.


வாக்குச்சாவடிக்கு செல்லும் போதே அடுத்த சோதனை.பேருந்து நிலையத்தில் இருந்து ஒன்றரை  கி.மீ தூரம் பையைச் சுமந்து கொண்டு மதியம் வெயிலில் நடந்தே சென்றோம். ஒரு ஆட்டோ கூட கடைசி வரை கண்ணில் படவே இல்லை.


பொருள்கள் அனைத்தும் வந்து சேர்ந்ததும் நாங்கள் தான் மாய்ந்து மாய்ந்து check list வைத்து check செய்தோம்.எங்கள் PO அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார். அந்த வளாகத்தில் மொத்தம் ஏழு வாக்கு  சாவடிகள்.பக்கத்து  அறையில் எனக்குத் தெரிந்த பெண் தான் PO . நாங்கள் வற்புறுத்தி அவரிடம் கேட்டாவது தெரிந்து கொள்ளச் சொன்னோம். அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொன்னாலும் இவருக்கு சரியாக புரியவில்லை.கடைசியில் அவரே நான் வேணும்னா வீட்டுக்குப் போயிரவா என்று பரிதாபமாகக் கேட்டார்.அவர் வேறு துறையைச் சேர்ந்த பெரிய அதிகாரி வேறு.அவருக்கு உடலில் பிரச்சனை என்று தெரியவே என்ன பெரிய வேலை..நாம் பார்க்காததா என்று துணிந்து விட்டோம் நானும் இன்னொரு ஆசிரியரும்.


இந்த முறை ஐம்பத்தைந்து வயதைக் கடந்த பெண் ஆசிரியர்களுக்கு அதிகம் எழுத்து வேலை இல்லாத PO3

ஆக நியமனம் செய்தார்கள். இதுவரை செய்யாத  சுலபமான வேலை என்ற எண்ணம் தவிடு பொடியானது.


மனதை ஆற்றுப்படுத்தி,திடமாக்கிக் கொண்டு (கெட்ட நேரத்திலும் நல்ல நேரமாக எனக்கு நன்கு தெரிந்த ஒருவரே ஜோன்ஸ் ஆபீசராக வந்தது.இது ஒன்று மட்டுமே தைரியம் கொடுத்தது) அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை குழுவில் வரும் காணொளிகளைப் பார்த்தும் பக்கத்து அறையில் கேட்டும் 

மளமளவென வேலைகளை 

முடித்து விட்டு 11 மணிக்கு மேல் படுத்தோம்.

தூக்கம்..? அன்றைய தினம் பணியில் இருந்தவர்கள் பஞ்சு மெத்தையே கொடுத்து, ஏ சி ரூமில் படுத்தாலும் தூங்க மாட்டார்கள். எங்களுக்கோ படுக்கும் அளவுக்கு அகலமான நெஞ்சு இல்லை.டெஸ்க்குடன் சேர்ந்த சிறிய இரும்பு பெஞ்சில் படுத்த எங்களுக்கு எப்படி தூக்கம் வரும்.?

ஃபேன் இருந்தாலும் இரவு முழுவதும்  கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. அப்படி இப்படி உருண்டு புரண்டு நேரத்தைக் கடத்தி மூன்று மணிக்கு எழுந்து குளிக்கப் புறப்பட்டோம். ஒரு கல்யாண மண்டபத்தில் குளிக்க ஏற்பாடு செய்து இருக்கிறோம் என்று முதல் நாள் இரவே சொல்லி இருந்தார்கள்.அது பள்ளியில் இரண்டு கி.மீ . தூரம் என்று சொல்லவே இருட்டில் அவ்வளவு தூரம் செல்வது சரியெனப் படவில்லை. ஒரு நாள் குளிக்காவிட்டால் குடியா முழுகிவிடும்? இன்றைய பொழுது நல்லதாக இருக்கவேண்டும்.பணியை சிறப்பாக முடிக்க வேண்டும் என்ற ஒரு நினைவை விட வேறு எதுவும் பெரிதாகப் படவில்லை.


குடிக்க வைத்து இருந்த தண்ணீரிலேயே முகம் கழுவி பல் தேய்த்து தயாரானோம். தலை வாரவில்லை என்று இதோ இப்போது தான் ஞாபகம் வருது. உடை மாற்ற

மறைவிடம் தேடியது பெருங்கொடுமை. வகுப்பறைகள் நிறைய இருந்தாலும் வாக்குச் சாவடிக்காக ஒதுக்கப்பட்ட அறைகள் மட்டுமே திறந்து இருந்தது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா இருந்தது. கடைசியில் கழிவறைக்கு இடையில் உள்ள சந்தில் வெளியே காவலுக்கு ஒருவர் நிற்க ஒருவர் உடை மாற்றினோம்.


முதல் நாள் மட்டுமே கழிவறையில் நீர் இருந்தது.அடுத்த நாள் ஒரே ஒரு அறையில் மட்டும் நீர் வந்தது. 

சாப்பாடு போனால் போகிறதென்று மூன்றாம் தர உணவகத்தில் மொத்தமாக செய்து பார்சலில் வரும் உணவு. ஒரு நேரம் கூட வயிராற சாப்பிடவில்லை.இரண்டே இரண்டு முறை தேநீர் கொடுத்தார்கள்.அதையும் ஒரு மடக்கு மட்டுமே..மீதத்தை அப்படியே குப்பையில் தான் போட்டேன்.

நல்லவேளையாக நானும் இன்னொருவரும் தலா நான்கு சப்பாத்தி,தக்காளித் தொக்கு ,புளியோதரை எடுத்துச் சென்றோம். ஏதோ மயங்கி விழாமல் இருக்கும் அளவுக்கு வயிற்றை சமாதானப்படுத்த அதுவே போதுமானதாக இருந்தது.


இதெல்லாம் இன்று ஒரு நாள் தானே ? என்று நாங்களே சமாதானப்படுத்திக் கொண்டோம்.


செல்லும் இடங்களில் எல்லாம் வசதியாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதும் இல்லை.


காலை ஐந்து மணிக்கு மெஷின் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.நானும் இன்னொரு ஆசிரியரும் அந்த வேலையைப் பார்த்துக் கொண்டோம்.ஒரு வழியாக சரியாக இணைப்புக் கொடுத்து மாதிரி வாக்குப்பதிவுக்கு 

தயாராக இருந்தோம். 


முகவர்கள் வர சற்று தாமதமானதால் 5.45க்கு மாதிரி  வாக்குப்பதிவு ஆரம்பித்தோம். 


எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு மெஷினை on செய்தால் VVPAT Error என்று காட்டவே பதட்டம் அதிகமாகி படபடப்பு கூடிவிட்டது. ஜோனல் ஆஃபீசருக்கு தகவல் சொல்லி விட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டேன்.இன்னொரு ஆசிரியை விரலை மடித்து ஏதோ மந்திரம் சொல்லி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தபோது விட்டார்.


இத்தனை களேபரத்திலும் எந்த ரியாக்சனும் இல்லாமல் ரிலாக்ஸாக இருந்தவர் எங்கள் தலைமை மேடம் தான். 

பத்தே நிமிடத்தில் மாற்று VVPAT வந்து விட்டது. பரபரவென மாதிரி வாக்குப்பதிவை நிறைவு செய்து,ஏழு மணிக்கு வாக்குப்பதிவை ஆரம்பித்த பிறகு தான் சீராக மூச்சுவிட முடிந்தது. அதற்குப் பிறகு தொய்வு இல்லாமல் எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்து முடித்தோம். 


இடையில் எங்கள் தலைமைக்கு அவ்வப்போது எழுத வேண்டிய வேலைகள்,செயலியில் அனுப்ப வேண்டியதை எல்லாம் சொல்லி அவரையும் ஃபாலோ செய்தோம். 

பணிக்குப் புதியவர் என்றாலும் சத்துணவு அமைப்பாளர் நாங்கள் இருவரும் சொல்வதை உள்வாங்கி சிறப்பாக செய்தார். அந்தப் பெண் உடல்நலம் இல்லாதவர்.5 வருடங்களுக்கு முன்பு ஸ்ட்ரோக் வந்து கண் பார்வை மங்கலாகி விட்டதாம். சமீபத்தில் முதுகில் கட்டிவந்து ஆபரேஷன் வேறு செய்து இருக்கிறார்.

மதியத்திற்கு மேல் கால் புசுபுசுவென வீங்கி சோர்ந்து போனாள் அந்தப் பெண்.

இவர் வேலையில் பாதியை

நானே செய்து கொடுத்தேன் .

நேரமாக ஆக அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் கண் கலங்கிவிட்டார். 

இன்டெலிபிள் இங்க் வைப்பதும் இவர் வேலையே.இவரால் முடியாது என்று அதையும் நானே செய்யப்போக அந்த மை எனக்கு அலர்ஜியாகி கை விரலில் தோல் உரிந்து போனது.(தோல் உரிந்தால் உள்ளே சிவப்பாகத்தானே இருக்கும்.எனக்கு வெள்ளையாக இருந்தது)

முகத்திலும் அங்கங்கே எரிச்சல் வேறு.

ஆறு மணியானதும் அவரை படுக்கச் சொல்லி விட்டு மற்ற வேலைகளை நாங்கள் பார்த்துக் கொண்டோம்.

  கடைசியில் பெட்டி எடுத்ததும் எங்கள் வாக்குச் சாவடி தான்.

ஒன்றரை மணிக்கு எடுத்தார்கள். தலைக்கு ஐநூறு ரூபாய் கொடுத்து இரண்டரை மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.


எல்லாம் சுமுகமாகவே நடந்துவிட்டால் பத்தோடு பதினொன்றாகி விடும். இது புது அனுபவம். வாழ்க்கையில் இனி ஒவ்வொரு தேர்தலின் போதும்  நினைத்துப் பார்க்கவும், சுவாரஸ்யமாகச் சொல்வதற்கும் மீள் பதிவு போடவும் ஒரு தரமான கதை என்னிடம் உள்ளது.     முகநூலில் வந்த பதிவு பார்வர்ட் செய்யப்பட்டுள்ளது

 *☝️☝️☝️தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வாரம் தோறும் இலவசமாக சதுரங்க பயிற்சி சர்வதேச பயிற்சியாளர்களைக் கொண்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது*





 Student admission 21/04/2026





















 Student admission 24/04/2026

















Wednesday, 22 April 2026

 *"வாக்களித்து விட்டு உடனே சென்று விடாதீர்கள்"* 


இது தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவுறுத்தல்.


*முழு விளக்கம் - நீங்க என்ன செய்யணும்?*



**1.வாக்களியுங்கள்** EVM-ல் உங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு நேராக உள்ள நீல பட்டனை அழுத்துங்கள் உங்கள் வாக்கை பதிவு செய்ய

**2. உடனே போகாதீங்க** பட்டனை அழுத்தியதும் பக்கத்தில் உள்ள VVPAT இயந்திரத்தை பாருங்கள் உங்கள் வாக்கு சரியாக விழுந்ததா என உறுதி செய்ய

**3. VVPAT சீட்டை சரிபார்க்கவும்** VVPAT-ல் 7 வினாடிக்கு ஒரு சீட்டு தெரியும். அதில் நீங்க வாக்களித்த வேட்பாளர் பெயர், சின்னம், வரிசை எண் இருக்கும். படத்தில் `2 B` என்பது போல EVM-ல் பதிவானதும் VVPAT சீட்டில் உள்ளதும் ஒன்றா என சரிபார்க்க

**4. தவறு இருந்தால்** VVPAT சீட்டில் வேறு சின்னம்/பெயர் தெரிந்தால், உடனே அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யுங்கள் தவறான வாக்குப்பதிவை நிறுத்தி சரிசெய்ய

**5. அப்புறம் கிளம்பலாம்** சீட்டு சரியாக இருப்பதை உறுதி செய்த பிறகு வாக்குச்சாவடியை விட்டு வெளியே வருவதே சிறப்பு உங்கள் வாக்கு பாதுகாப்பானது



*முக்கிய குறிப்பு*: VVPAT-ல் தெரியும் சீட்டு 7 வினாடிக்கு பிறகு தானாகவே கீழே விழுந்து சீல் வைக்கப்பட்ட பெட்டியில் விழுந்துவிடும். அதை நீங்கள் எடுக்க முடியாது. பார்க்க மட்டுமே முடியும்.


*4. VVPAT ஏன் கொண்டு வரப்பட்டது?*

EVM மட்டும் இருந்தபோது "நான் அழுத்திய பட்டனுக்கு தான் வாக்கு விழுந்ததா?" என்ற சந்தேகம் மக்களுக்கு இருந்தது. அந்த சந்தேகத்தை போக்க, *"நீங்களே கண்ணால் பார்த்து உறுதி செய்ய"* VVPAT கொண்டு வரப்பட்டது. இது ஒரு ரசீது மாதிரி.


*சுருக்கமா*: வாக்கு போட்டு "பீப்" சத்தம் கேட்டதும் ஓடிடாதீங்க. 7 செகண்ட் நின்னு VVPAT-ல உங்க சின்னம் தெரியுதானு பார்த்துட்டு, சரியா இருந்தா தான் வெளியே வாங்க. இது உங்க ஜனநாயக கடமை மற்றும் உரிமை. ⚖️


*சி.திவாகர்,Bcs.,BL*

தமிழ்நாட்டில் ஆர்வமுடன் வாக்களித்த இளம் தலைமுறை வாக்காளர்கள்! 


                               முதல் வாக்கு பதிவு – மகிழ்ச்சியை பகிர்ந்த லெட்சுமணன், அனைவரையும் வாக்களிக்க அழைப்பு

காரைக்குடி: காரைக்குடி பாரி நகரில் அமைந்துள்ள சுப்பையா அம்பலம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில், அண்ணாமலையார் நகரை சேர்ந்த முதல் தலைமுறை வாக்காளர் லெட்சுமணன் தனது வாக்கை பதிவு செய்தார்.

முதல் முறையாக வாக்களித்த அனுபவம் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். “முதல் தடவையாக வாக்களித்தது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. இன்று காலையிலேயே வந்து என் ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மிகவும் சிறப்பாக இருந்தது,” என கூறினார்.

மேலும், அனைவரும் தங்களது வாக்குரிமையை உணர்ந்து, முடிந்தவரை சீக்கிரமாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


Monday, 20 April 2026