*🛑🟢🔴மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்கள். சமீபத்தில் பள்ளியில் தன்னம்பிக்கை பேச்சாளர் சுஜித் குமார் அவர்களின் பேச்சை கேட்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர் தாங்கள் தற்பொழுது பயணிக்கும் விதத்தை ஒரு தாளின் இடது பக்கத்திலும், எதிர்காலத்தில் எவ்வாறு மாற வேண்டும் என்கிற இலக்கை தாளின் வலது பக்கத்திலும் ஓவியமாக வரைந்து வந்தார்கள். மாணவிகள் ஏஞ்சல் ஜாய், நந்தனா, மாணவர் யோகின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். முதல் முயற்சி நிச்சயமாக அவர்கள் மனதில் பதிந்து விடும். இலக்குகளை ஓவியங்களாக பேப்பரில் தாங்களே வரைந்து கொண்டு வந்து பள்ளியில் அவர்கள் காண்பித்த போது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. மாணவ மாணவியர் இன்னும் மென்மேலும் மிகப்பெரிய இடங்களைப் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்*
WELCOME TO KALVIYE SELVAM
உழைப்பே உயர்வு




























































