Friday, 28 August 2026

 

அஞ்சலக செயல்பாடுகளை நேரில் அறிந்த மாணவர்கள்

தேவகோட்டை தலைமை அஞ்சலகத்தில் சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களின் களப்பயணம்


























Thursday, 27 August 2026

 

குடியிருப்பு பகுதிகளில் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

பூஜ்ஜிய நிழல் தினத்தை செயல்விளக்கத்துடன் எடுத்துக்கூறி அசத்திய மாணவர்கள்



































தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், தங்கள் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு ‘பூஜ்ஜிய நிழல் தினம்’ குறித்த அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

விடுமுறை காலமாக இருப்பதால், மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே சுற்றுவட்டாரத்தில் உள்ள பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பூஜ்ஜிய நிழல் தினத்தின் அறிவியல் காரணங்களை விளக்கினர். திறந்த வெளியில் நின்றபோது சூரியக் கதிர்கள் நேரடியாக காலடியில் விழுந்து, அருகில் நிழல் தெரியாததை பொதுமக்களும் பெற்றோர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

பூஜ்ஜிய நிழல் தினம் ஆண்டுக்கு இரண்டு முறை நிகழும். சூரியனின் தோற்றநிலை அட்சரேகைக்கு சமமாக அமையும் நேரத்தில், சூரியக் கதிர்கள் பொருட்களின் மீது செங்குத்தாக விழுவதால் அவற்றின் நிழல் அந்தப் பொருளின் அடிப்பகுதிக்குள் விழும். இதனால் வெளிப்புறமாக நிழல் தெரியாது. அந்தந்த பகுதியின் அட்சரேகைக்கு ஏற்ப பூஜ்ஜிய நிழல் தினத்தின் தேதி மாறுபடும் என்று மாணவர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்துலெட்சுமி, சிவரஞ்சனி, ஆர்த்தி, ஸ்ரீதர் ஆகியோர் விளக்கமளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாணவிகள் ரித்திகா, நந்தனா, மாலினி, லேகாஸ்ரீ, ஸ்டெபி மற்றும் மாணவர் அசுவத் ஆகியோர் நடராஜபுரம் , திருவள்ளுவர் தெரு, சத்தியமூர்த்தி தெரு ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் அருகில் உருளை வடிவ பொருளை வைத்து பூஜ்ஜிய நிழல் நிகழ்வை செயல்விளக்கமாக செய்து பார்த்தனர். மேலும், தங்களுடன் படிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இதனை செய்து காண்பித்து, அதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகளை விளக்கினர். கட்டு கதைகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

                               குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் இந்த நாளில் தேவகோட்டை பகுதியில் மதியம் 12.25 மணி அளவில் இந்த நிகழ்வு ஏற்படும் என்றும் விளக்கினார்கள்.

மாணவர்களின் இந்த முயற்சி குடியிருப்பு பகுதிகளில் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகளை எளிய முறையில் புரிந்துகொள்ள பொதுமக்களுக்கு உதவியது.

பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் உருளை வடிவ பொருளை வைத்து பூஜ்ஜிய நிழல் தினத்தை செயல்விளக்கமாக செய்து பார்த்தனர். மேலும், பொதுமக்களுக்கு அதன் அறிவியல் உண்மைகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் - வீடியோ 

https://www.youtube.com/watch?v=pwb2LlqgNHY

https://www.youtube.com/watch?v=TlV9EW0ZKLA