Thursday 29 November 2018

 இந்தியாவின் கண் அனுப்பிய இஸ்ரோவுக்கு   வண்ண பலூன்கள் பறக்கவிட்டு பாராட்டு


 



 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விண்வெளித் துறையில் இஸ்ரோவின்  புதிய சாதனைக்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
                                               

                               இஸ்ரோ தயாரித்த நிலப்பரப்பு கண்காணிப்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கு உதவும் செயற்கைக்கோளான ஸ்ரீஹைசிஸ்’  உட்பட 31 செயற்கைக்கோள்களை  பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் உதவியுடன் இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த  30 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டு உள்ளன என்கிற தகவலை மாணவர்களுக்கு  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.


பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் மூலம் ஸ்ரீஹைசிஸ்
செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி விண்வெளித் துறையில் புதிய சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு   வண்ண பலூன் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.






No comments:

Post a Comment