Thursday, 3 November 2016

மனிதர்களில் நான்கு வகை என்கிற தலைப்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி ராஜேஸ்வரி கந்த சஷ்டி விழாவில் பேசிய வீடியோ காட்சி

மிகபெரிய மேடையில் தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவிகள் இன்று மாலை 5.30 மணி அளவில் கீழ்க்கண்ட தலைப்புகளில் பேச உள்ளனர்.
1) க.ராஜி
பொருள் : வெற்றி நம்கையில்

2 ) மு.தனலெட்சுமி
பொருள் ; திருப்புகழில் கண்கொடுத்த கண்ணப்பர்
3 ) மு.ராஜேஸ்வரி
பொருள் : மனிதர்களில் நான்கு வகை

அனைவரும் வருக.

Wednesday, 2 November 2016

சுட்டி விகடனின் அழகான வீடு  

சுட்டி கிரியேசன்ஸ் அழகான வீடு  வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு 

 

          சுட்டி விகடன்  இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான அழகான வீடு  வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .

தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியரின் இறைவணக்க பாடல் பாடிய காட்சி 
 
இன்றைய தினகரன் பத்திரிக்கையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பான செய்தி கலர் படத்துடன் வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள்.
 Displaying image.png

ஜெர்மன் சுபாஷினி அவர்கள் தனது முகநூலில் பள்ளியை பாராட்டுதல் மற்றும் பள்ளிக்கு விரைவில் வருகை தருவதை அன்புடன் வரவேற்றல்


ஜெர்மனி தமிழ் மரபு அறக் கட்டளை

செயலாளரும்,கல்வெட்டு ஆராய்ச்சியாளரு

மான  மலேசியாவை சார்ந்த சுபாஷினி

ட்ரெம்மல்  அவர்கள் சிவகங்கை மாவட்டம்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்

அரசு உதவி  பெறும் நடுநிலைப் பள்ளி

செயல்பாடுகளை பாராட்டி    தனது

முகநூலில் பதிவிட்ட தகவல் பின்வருமாறு :

             

கேள்வி கேட்டால் தவறு என சொல்லி சொல்லி வளர்த்த சூழலில் கேள்விகளே கேட்காமல் சொன்னவற்றை சுய நிந்தனையின்றி ஏற்றுக் கொள்ளும் குழந்தைகள் நிலை மிகப் பரிதாபமானது. அவர்கள் சிந்திக்கவே பயப்படுவார்கள்.
சென்ற ஆண்டு டிசம்பரில் நான் தேவகோட்டை சேர்மன் மாணிக்கம் அரசு பள்ளிக்குச் சென்றிருந்தேன். அங்கு சந்தித்த மாணவர்கள் மிக சுறுசுறுப்பனாவர்கள் என்பதோடு சொன்ன தகவல்களைக் கவனத்துடன் கேட்டு எனது உரைக்கு ஏற்ற வகையில் கேள்விகளைக் கேட்டார்கள். ஒருவர் விட்டு ஒருவர் என ஆர்வத்துடன். இவர்களின் மேல் ஏற்பட்ட ஆரவத்தினால் ஜெர்மனி திரும்பும் முன் மீண்டும் ஒரு முறை சென்றிருந்தேன். இந்த ஆண்டும் இந்த மாணவர்களைச் சந்திக்க 1/2 நாள் எனது தமிழகப் பயணத்தில் ஒதுக்கியுள்ளேன். அருமையான மாணவ்ர்கள். அருமையான ஆசிரியர்கள். குறிப்பாகத் தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கம் மிகப் பாராட்டுதலுக்குறியவர்.”

இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் ஜெர்மன் சுபாஷினி அவர்கள்  பதிவிட்டுள்ளார்.



பள்ளியின் சார்பாக ஜெர்மன் சுபாஷினி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நன்றி.
உங்களின் பார்வைக்கு முகநூல் பதிவு.



Monday, 31 October 2016

மாநில போட்டிக்கு தேர்வு
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி  போட்டியில் வெற்றி
தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி  மாவட்ட அளவிலான அறிவியல்  கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்று மெடல்,விருதுடன் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றதற்கு பள்ளியில்  பாராட்டு விழா நடைபெற்றது.