Tuesday, 14 July 2026

 

தேவகோட்டையில் மாணவர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’  பயிற்சி கையேடுகள் வழங்கல்





தேவகோட்டை, ஜூலை :

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ், மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில்  பயிற்சி கையேடுகள் மற்றும் எண்ணும் எழுத்தும் பயிற்சி நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தேவகோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன், பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் மற்றும் பள்ளியின் பெற்றோர்–ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு, நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நூல்கள் மற்றும் அரும்பு, மொட்டு, மலர் பயிற்சி கையேடுகளை வழங்கினர்.


நிகழ்ச்சி பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்–ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

No comments:

Post a Comment