Monday, 29 June 2020

  யோகாவை வீட்டிலேயே செய்து அசத்தும் பள்ளி மாணவர்கள்  

Saturday, 27 June 2020

இளம் வயது மாணவர்களின்  பேச்சாற்றல், கூர்ந்து கவனிக்கும் திறன், சிந்திக்கும் ஆற்றல் ,கடைசிவரை வாய்ப்புக்கும் வெற்றிக்கும் போராடும் விடாமுயற்சியை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள போட்டியினை அனைவரும் கேட்கலாம்


கேளுங்க , கேளுங்க , கேட்டுகிட்டே இருங்க! தொடர்ந்து ஆறாவது வாரமாக இன்னைக்கும் கேளுங்க !


கோடை பண்பலை 100.5லும் , மதுரை பண்பலை 103.3லும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து 18 வாரங்கள் கேட்டு மகிழுங்கள் 




Friday, 26 June 2020

 இளம் வயது மாணவர்களின்  பேச்சாற்றல், கூர்ந்து கவனிக்கும் திறன், சிந்திக்கும் ஆற்றல் ,கடைசிவரை வாய்ப்புக்கும் வெற்றிக்கும் போராடும் விடாமுயற்சியை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள போட்டியினை அனைவரும் கேட்கலாம்


கேளுங்க , கேளுங்க , கேட்டுகிட்டே இருங்க! தொடர்ந்து ஆறாவது வாரமாக இன்னைக்கும்,நாளைக்கும் கேளுங்க !


கோடை பண்பலை 100.5லும் , மதுரை பண்பலை 103.3லும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து 18 வாரங்கள் கேட்டு மகிழுங்கள் 



              ஆளுமைகளுடனான அனுபவங்கள்
திசைகள் குழுவின் தலைவர்  மருத்துவர் தட்சணாமூர்த்தி அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்


TNPAT-3 செட்டிநாட்டில்....

     திசைகள் நூலக புத்தக அன்பளிப்பு திட்டம் - 3வது நிகழ்வு தமிழரின் பண்பாட்டு அடையாளமான செட்டிநாட்டு பிரதேசமான, தேவகோட்டையில் 8-4-19 அன்று நடத்தப்பட்டது.
     300 ஏக்கர் நிலம், 15 இலட்சம் பணம் இருந்தால் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கலாம் என்று ஜவஹர்லால் நேரு அறிவித்த அடுத்த நாளே 15 இலட்சம் பணத்துடன் நேருவுக்கு முன்னே நிற்கிறார் வள்ளல் அழகப்ப செட்டியார். இந்தியாவில் ஓர் தனிநபரின் முயற்சியால் மட்டுமே தொடங்கப்பட்ட ஒரே ஆராய்ச்சி கல்வி நிறுவனம் என்னும் வரலாற்றுக்கு சொந்தமான காரைக்குடி CECRI என்னும் மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தின் சிறிய வரலாறு இது.
     கல்விக்காக அத்தனையும் கொடையாக வழங்கிய அழகப்ப வள்ளலின் பூமியில், அறந்தாங்கியில் 2005 ஆம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக தொடங்கப்பட்ட திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு, முதன் முறையாக தன் மாவட்டமான புதுக்கோட்டை தாண்டி, காலடி எடுத்து வைத்தது சாலப் பொருத்தமும் ஓர் வரலாற்று நிகழ்வுமாகும்.
    80 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஒருங்கே பழமையின் அடையாளமாகவும் புதுமையின் பூமியாகவும் திகழ்கிறது. விழா அன்று நுழைவு வாயிலிலேயே தான் வெற்றி பெற்ற 50 சான்றிதழ்களை அடுக்கி வைத்து மாணவி பாரதி நம்மை கம்பீரமாக வரவேற்றாள். கருவிலிருந்தே வாங்கியிருப்பாள் போல. உள்ளே நுழைந்தால் அத்தனை பேரும் பாரதிகளாய். ஒவ்வொருவர் கைகளிலும் குறைந்தது 10 சான்றிதழ்கள். பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்கள், சமூகத்தின் சாதனைக்கு சான்றாய்.
     திருக்குறளுக்கு, அபிராமி அந்தாதிக்கு நடனம் என்று ஆரம்பத்திலிருந்து ஆச்சர்யம் ஆரம்பமாகியது. 3 மணி நேரம் நடந்த நிகழ்வில் ஒரு மாணவன் கூட ஒரு நொடி கூட சோர்வடையவில்லை.
இன்னும் ஏதாவது செவிக்கும், சிந்தைக்கும் தீனி கிடைக்குமா என்று விழித்துக் கொண்டிருக்கிறான். குறிப்புகள் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறான். இறுதியில் அனைவரது பேச்சையும் உள்வாங்கி ஒவ்வொரு மாணவனும் பேசிய பேச்சும் தொடுத்த வினாக்களும் விழாவின் உச்சம். பிரமிப்பு. அந்த நிமிடம் கேட்டு, உள்வாங்கி, செரித்து, சிந்தை தொடுக்கப்பட்ட மாலையாய் அவர்கள் இறுதியில் சூட்டியது - பேசியது ஆசிரியர்களால் எந்தக் கல்லையும் கடவுளாக்க முடியும், அப்படியிருக்க கற்பூர மாணவர்களை கடவுளாக்க - சாதனையாளர்களாக்க முடியாதா என்ன? என்பதற்கான சமகால சரித்திர உதாரண நிகழ்வு.
    தலைமை ஆசிரியர் திரு .சொக்கலிங்கம் தலைமையிலான ஆசிரியர் குழுவின் அர்ப்பணிப்பு உணர்வை, ஆவணங்களிலிருந்து ஆரம்பித்து அத்தனையிலும் காணலாம் நாம். வெ.இறையன்பு, மயில்சாமி அண்ணாத்துரை, பல்கலைக்கழக வேந்தர்கள், நீதிபதிகள் அத்தனை பேரையும் அழைத்து வந்து விடுகிறார் ஐயா சொக்கலிங்கம். அவர்களை இரத்தமும் சதையுமாகப் பார்க்கும் தம் மாணவர்கள் அப்படி ஆகிவிட மாட்டார்களா என்ற பெருங் கனவுதான் அதற்கு காரணம். தான் மட்டுமல்ல, தன் சக ஆசிரியர்களையும், பணியாளர்களையும் கூட தன் வேகத்திற்கு அழைத்து ஓடுகிறார் திரு.சொக்கலிங்கம். 
     தமிழகத்தின் ஓர் முன்மாதிரி பள்ளியாகத் திகழும் இந்தப் பள்ளியின் செயல்பாடுகள் தமிழகப் பள்ளிகளாலும், ஆசிரியர்களாலும் பின்பற்றத் தக்கவை.
       தம் மாணவர்கள் அத்தனை பேரையும் அப்துல் கலாம்களாக ஆக்கி விடத் துடிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியின் கனவுதான் திசைகளின் இந்தத் தேசத்தின் கனவும்....

    கனவு மெய்ப்படும்..

நம்பிக்கையோடு👍
Dr.ச.தெட்சிணாமூர்த்தி,MBBS., DDVL.,
அரசு தோல் நோய் மருத்துவர்,
தலைவர் - திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு,
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம்


Saturday, 20 June 2020

தொடர்ந்து ஐந்தாவது வாரமாக கேளுங்க , கேளுங்க , இன்னைக்கு மதியம் 12.02 மணிக்கு கேளுங்க !


  மதுரை பண்பலை 100.5ல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து 18 வாரங்கள் கேட்டு மகிழுங்கள் 



Friday, 19 June 2020

 ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

மாவட்ட கல்வி அதிகாரி அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 

                                      தேவகோட்டை மாவட்ட கல்வி அதிகாரியாகப் பணியாற்றி தேனி முதன்மை கல்வி அலுவலராக ஓய்வுபெற்ற மாரிமுத்து அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 



                 இன்று 8/ 8 /2016 இப்பள்ளியில் கவிதை போட்டிக்கு தலைமை ஏற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்துரையாடுகின்ற  ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. நல்ல ஆரோக்கியமான பள்ளி ஆசிரியர்கள், மதிப்பிற்குரிய தலைமையாசிரியரின் தலைமையின் கீழ் சமூக அக்கறையோடும், கடமை  பொறுப்போடும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். தலைமையாசிரியர் மிகச் சிறந்த தலைமை பொறுப்புடன், மாணவர்களுடன் அக்கறையோடும் பணியாற்றி வருகின்றார். கற்பித்த  நவீன யுக்திகளை கையாண்டு பாடங்கள் போதிப்பது மிகச்சிறப்பாகும் . அரசின் நோக்கம், திட்டங்கள் ஆகியவற்றினை நிறைவேற்றுவதில் தலைமையாசிரியர் சிறப்பாக செயல்படுகின்றார்.

 மாரிமுத்து 
DEO,
DVK.

                             இன்று இப்பள்ளியில் பசுமைப்படை விழா நடைபெற்றது. எதிர்கால தேவையை மாணவர்கள் நன்கு உணர்ந்து இருக்கின்றார்கள். நம்பிக்கையை உணர்ந்த சிறந்த தலைவர் எதையும் சாதிக்கலாம் என்ற நோக்கம் உள்ள தலைமை ஆசிரியரின் சிறந்த செயல்பாடு பாராட்டுக்குரியது. நன்றி. 

 மாரிமுத்து 
DEO,
DVK. 



Tuesday, 16 June 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள்

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஆய்வாளர் அவர்களுடனான  பள்ளி பகிர்வுகள்

          
               இன்று 1 / 11 / 2019 ம் தேதி சிவகங்கை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் (மு.குமாரவேல்) ஆகிய நான் இந்த வருடத்தின் உடைய ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அறிவிக்கப்படுவதை முன்னிட்டு இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சொக்கலிங்கம் அவர்களின் முன்னிலையில் மாணவர்களிடையே லஞ்சம் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உரையாற்றினேன்.  இப்பள்ளியின் சிறப்பு என்னவெனில் ஒரு விழாவினை முறையாக துவக்கி இறுதியில் மாணவர்கள் புரிந்து கொண்டுள்ள விஷயங்களை எந்த அளவிற்கு மாணவர்கள் தன்னுள் விஷயங்களை உள்வாங்கிக் கொண்டார்கள் என்பதனை காணும் விதமாக இறுதியாக  ஃபீட்பேக் செஷன்  என்பதில் மாணவர்களை பேச  வைத்தபோது  அவர்கள் உள்வாங்கிய விவரங்களை வெளிப்படுத்திய விதங்களை பார்த்து வியந்துபோனேன். இந்த அளவிற்கு  மாணவர்களை தயார் படுத்தி வைத்துள்ள இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும்  ஆசிரியர்களின்  பணியானது உண்மையிலேயே மிகவும் பாராட்டத்தக்கதாகும். இதுபோன்ற மாணவர்களின் செயல் திறனை  அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் உங்கள் அனைவருக்கும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 

மு.குமாரவேல்,
 இன்ஸ்பெக்டர்,
 விஜிலன்ஸ்,
 சிவகங்கை.