தீயணைப்பு துறையின் வினாடி வினா போட்டி
தேவகோட்டை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு துறையின் சார்பாக வினாடி வினா போட்டி நடைபெற்றது.
பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலையத்தை சார்ந்த முன்னனி தீயணைப்போர் முனீஸ்குமார் பள்ளி மாணவர்களிடம் தீயணைப்பு துறையின் பல்வேறு தகவல்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கிக் கூறினார் தீயணைப்பு தொடர்பான பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு மாணவர்கள் பலரும் மிகச் சரியான பதில்களைக் கூறி ஆச்சரியத்தில் அசத்தினார்கள். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பாக வினாடி-வினா போட்டி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலையத்தை சார்ந்த முன்னனி தீயணைப்போர் முனீஸ்குமார் தீயணைப்பு தொடர்பான குறிப்புகளை விரிவாக விளக்கமாக எடுத்துரைத்தார்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=LckuHuKPxc4
No comments:
Post a Comment