Saturday, 23 March 2019


 வீதி நாடகம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் 

நடனம்,நாடகம்,பாடல்,கலந்துரையாடல்,பேச்சு மூலம் பொது மக்கள் வசிக்கும் வீதிகளில் சென்று 100 சதவிகிதம் வாக்களிக்க தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த பள்ளி மாணவர்கள் 

தேவகோட்டை - தேவகோட்டை நடராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் 100 சதவிகித வாக்கு பதிவை வலியுறுத்தி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.







                                                         ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை நகராட்சி பொறியாளர் ஜெயபால் தலைமை தாங்கி தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக பேசினார்.மழலை மாணவர்கள் பிரிஜித் ,அஜய்,மோகன்தாஸ்,முத்தய்யன் ,ஓவியா,அட்சயா,கனிஷ்கா,முகல்யா,ஹரிப்ரியா,அனுசுயா ,சௌமியா ஆகியோர் தேர்தல் விழிப்புணர்வு பாட்டுக்கான  கண்கவர்  நடனம் ஆடி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்கள்."பணத்திற்காக நீயும்தானே ஓட்டளிக்காதே,நீயும் வித்துப்புட்டு பிறகுதானே தெருவில் நிற்காதே" என்று வரும் பாடல் வரிகளுடன் விலையில்லா ஓட்டுரிமையை நீங்கள்  விற்காதீர் என்கிற தேர்தல் விழிப்புணர்வு பாடலை மாணவிகள்  பாக்கியலட்சுமி,மகாலெட்சுமி ஆகியோர் ராகத்துடன் பாடினார்கள்.நாடகம் வாயிலாக , நாங்கள் ஓட்டை நோட்டுக்கு போடமாட்டோம் , நாட்டு நன்மைக்குத்தான் போடுவோம் என்பதை வெளிப்படுத்தி ,உங்கள் விரலின் மை எல்லாக்கரையையும் போக்கட்டும் என்றும்,வாக்கை விற்பனை செய்தவரின் அவல நிலையை விளக்கும் வகையில் இரண்டு நாடகங்களை நடித்து காண்பித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.வாக்குரிமை என்பது நமது வாழ்க்கையின் அடிப்படை உரிமை என்பதை நாம் மறந்து விடாமல் இருக்க அழகான கவிதையை கூறி அசத்தினார் மாணவி அபிநயா.தேர்தல் விழிப்புணர்வை ஆங்கில உரை மூலம் விளக்கினார் எட்டாம் வகுப்பு மாணவர் கார்த்திகேயன்.ஆசிரியைகள் செல்வமீனாள் , முத்துமீனாள் ,ஸ்ரீதர் ஆகியோர் மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கு கொண்டு பார்த்து ரசித்தனர்.

பட விளக்கம் : தேவகோட்டை நடராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் 100 சதவிகித வாக்கு பதிவை வலியுறுத்தி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நாடகம்,நடனம்,பாடல்,பேச்சு மூலம்   தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,தேவகோட்டை நகராட்சி பொறியாளர் ஜெயபால் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 கீழ்கண்ட you tube லிங்க் வழியாக சென்று மாணவர்களின் விடீயோக்களை காணலாம் 

 https://www.youtube.com/watch?v=RtLJ687OuV4&authuser=1

 https://www.youtube.com/watch?v=q5kYLftG5n8&authuser=1


 https://www.youtube.com/watch?v=R8-9GDaPzh0&authuser=1

No comments:

Post a Comment