Saturday, 31 October 2015
Thursday, 29 October 2015
Tuesday, 27 October 2015
அன்பின் சொக்கலிங்கம் சார்
நேற்று
காலையில் சங்கரன் கோவிலில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருக்கையில், காலை 5
30 மணி முதல் முயற்சி செய்து 6 மணிக்கு செய்தித் தாள் கிடைத்ததும்
காரைக்குடி தமிழ் இந்து வாசகர் திருவிழாவில் உங்கள் பள்ளிக்கூடத்தின் பெயர்
இருக்கிறதா என்றுதான் முதலில் தேடிப் பார்த்தேன்...
ஆனால்
எனக்கு விடை இன்றைய தமிழ் இந்துவில் எதிர்பாராத இடத்தில் பதில்
இருந்தது....வாசகர் கடிதங்கள் இடம்பெறும், இப்படிக்கு இவர்கள் பகுதியில்!
ஆஹா...பள்ளிக் குழந்தைகள் பெயரோடு!
வாழ்த்துக்கள் சார்...உங்கள் இடையறாத ஊக்கத்திற்கு! அந்த அன்பர் திருப்பத்தூர் ராமநாதன் அவர்களுக்கும்!
எஸ் வி வேணுகோபாலன்
Published: October 27, 2015 11:16 ISTUpdated: October 27, 2015 11:16 IST
ஆர்வம் கொண்ட அந்த மாணவர்கள்!
கடந்த
ஞாயிறு அன்று காரைக்குடியில் நடைபெற்ற வாசகர் திருவிழாவில் பங்கேற்ற என்
கவனத்தை ஈர்த்தார்கள் - பார்வையாளர்கள் வரிசையில் துறுதுறுவென
அமர்ந்திருந்த பள்ளிச் சிறுவர்கள் 11 பேர்.
அவர்கள்
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி என்ற அரசு உதவி பெறும்
பள்ளியில் இருந்து வந்தவர்கள் என்று அறிந்துகொண்டேன்.
ஒன்றாம்
வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையில் வகுப்புக்கு ஒருவர் என்ற வீதத்தில்
ஜெயஸ்ரீ, வெங்கட்ராமன், ஜனஸ்ரீ, அய்யப்பன், கார்த்திகேயன், உமாமகேஸ்வரி
ஆகியோரும், ஏழாம் வகுப்பு சார்பில் பரமேஸ்வரி, ராமேஸ்வரி, எட்டாம் வகுப்பு
சார்பில் தனம், பூவதி, கண்ணதாசன் என அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.
தங்களது
கதை, ஓவியங்களை ‘தி இந்து’வின் மாயாபஜார் இணைப்பிதழில் வெளியிட்டு
ஊக்கப்படுத்திவருவதால், வாசகர் திருவிழாவுக்கு உற்சாகமாகக் கிளம்பிவந்ததாக
அந்தக் குழந்தைகள் சொன்னபோது வியப்பாக இருந்தது.
பாடத்துக்கு
வெளியே சென்று பொது விஷயங்களைப் பற்றி மாணவர்களுடன் பேச ’தி இந்து’ தமிழ்
நாளிதழ் உதவிபுரிவதாகச் சொன்னார் அவர்களை அழைத்து வந்திருந்த ஆசிரியை
கலாவதி. இவர்களுடன் ஒரு குழந்தையின் தாய் சித்ரா, மற்றொரு குழந்தையின்
பாட்டி சீதாலட்சுமி ஆகியோரும் விழாவுக்கு வந்திருந்தது என்னை நெகிழவைத்தது.
- ராமநாதன், திருப்பத்தூர்.
Monday, 19 October 2015
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் தொடர்பான செய்தி தொகுப்பு நியூஸ் 7 தமிழ் தொலைக்கட்சியில் காணுங்கள்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் பேச்சு போட்டியில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றது தொடர்பான செய்தியையும் , பள்ளியின் செயல்பாடுகள் தொடர்பான செய்தி தொகுப்பையும் இன்று இரவு 11 மணி முதல் 11.30 மணிக்குள்ளும் , நாளை 20/10/2015 செவ்வாய் கிழமை மதியம் 2மணி முதல் 2.30 மணிக்குள்ளும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் காணுங்கள். லெ .சொக்கலிங்கம் ,தலைமை ஆசிரியர் ,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.நன்றி
http://ns7.tv/ta
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் பேச்சு போட்டியில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றது தொடர்பான செய்தியையும் , பள்ளியின் செயல்பாடுகள் தொடர்பான செய்தி தொகுப்பையும் இன்று இரவு 11 மணி முதல் 11.30 மணிக்குள்ளும் , நாளை 20/10/2015 செவ்வாய் கிழமை மதியம் 2மணி முதல் 2.30 மணிக்குள்ளும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் காணுங்கள். லெ .சொக்கலிங்கம் ,தலைமை ஆசிரியர் ,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.நன்றி
Friday, 16 October 2015
தினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2015 விழா- எனது நன்றிகள்
தினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2015 விழா நடைபெறும் இடம் மதுரை.விருது பெறுபவருக்கு மட்டுமே அனுமதி என்று அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விருது அறிவிப்பு தினமலர் பத்திரிக்கையில் வெளியான உடன் அன்று காலை முதல் எனக்கு அறிமுகம் இல்லாத மற்றும் அறிமுகமான என் மீது அன்பு கொண்ட அதிகமானோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். திருப்பத்தூர் ஓய்வு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சுப்பையா ,தேவகோட்டை ராம் நகர் ஜெய பிரபகரன்பண்டியன், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியை முத்து மீனாள் ,தேவகோட்டை கருவுல அலுவலர் திரு.முருகன்,திருப்பத்தூர் ஓய்வு AEO திரு.ரெங்கசாமி ,தேவகோட்டை ABDO திரு.குமார்,கல்வித்துறை ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அலுவலர் திரு.நாகசுந்தரம்,எனது நண்பர் விருதுநகர் திரு செந்தில்,மானமதுரை ஆசிரியை மீனாட்சி நடராஜன்,தேவகோட்டை NSMVPS தமிழ் ஆசிரியர் ஓய்வு திரு.சண்முகநாதன்,தேவகோட்டை வைரம் சுவாமிநாதன் செட்டியார்,TNSF மாவட்ட செயலாளர் திரு.ஜீவா ,தேவகோட்டை அரவிந்த் ஸ்நாக்ஸ் ஆச்சி அவர்கள்,ராமநாதபுரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர்,தேவகோட்டை சன்மார்க்க சங்கம் செயலர் ,தேவகோட்டை போஸ்ட் மேன் ( எங்கள் பள்ளி பகுதி )திரு.ராஜேந்திரன்,காரைக்குடி ரயில்வே அதிகரி திரு.சந்திர சேகர்,திண்டுக்கல் ஆசிரியர் ஏங்கல்ஸ் ,புளியால் பள்ளி ஆசிரியர் சேவியர்,தேவகோட்டை டி பிரிடோ ஆசிரியர்கள் ப்ரைட்,ஜெயசீலன்,சுப்ரமணியன் திருப்பத்தூர் தலைமை ஆசிரியர் திரு.ஸ்ரீதர் ராவ்,குழிபிறை முன்னாள் தலைமை ஆசிரியர் பால கிருஷ்ணன்,கீழசிவல்பட்டி உறவினர் திரு.அழகப்பன்,(இவர்கள் அனைவரும் தொலைபேசி வாயிலாக ) ஆகியோருக்கும்,முக நூல் ,வாட்சப் ,மெசேஜ் வாயிலாகவும் எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும்,தற்போது வாழ்த்து சொல்லி வருபவர்களுக்கும் ,like கொடுப்பவர்களுக்கும், விருது கிடைக்க காரணமான அனைவருக்கும் எனது நன்றி.
தினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2015 விழா நடைபெறும் இடம் மதுரை.விருது பெறுபவருக்கு மட்டுமே அனுமதி என்று அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விருது அறிவிப்பு தினமலர் பத்திரிக்கையில் வெளியான உடன் அன்று காலை முதல் எனக்கு அறிமுகம் இல்லாத மற்றும் அறிமுகமான என் மீது அன்பு கொண்ட அதிகமானோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். திருப்பத்தூர் ஓய்வு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சுப்பையா ,தேவகோட்டை ராம் நகர் ஜெய பிரபகரன்பண்டியன், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியை முத்து மீனாள் ,தேவகோட்டை கருவுல அலுவலர் திரு.முருகன்,திருப்பத்தூர் ஓய்வு AEO திரு.ரெங்கசாமி ,தேவகோட்டை ABDO திரு.குமார்,கல்வித்துறை ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அலுவலர் திரு.நாகசுந்தரம்,எனது நண்பர் விருதுநகர் திரு செந்தில்,மானமதுரை ஆசிரியை மீனாட்சி நடராஜன்,தேவகோட்டை NSMVPS தமிழ் ஆசிரியர் ஓய்வு திரு.சண்முகநாதன்,தேவகோட்டை வைரம் சுவாமிநாதன் செட்டியார்,TNSF மாவட்ட செயலாளர் திரு.ஜீவா ,தேவகோட்டை அரவிந்த் ஸ்நாக்ஸ் ஆச்சி அவர்கள்,ராமநாதபுரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர்,தேவகோட்டை சன்மார்க்க சங்கம் செயலர் ,தேவகோட்டை போஸ்ட் மேன் ( எங்கள் பள்ளி பகுதி )திரு.ராஜேந்திரன்,காரைக்குடி ரயில்வே அதிகரி திரு.சந்திர சேகர்,திண்டுக்கல் ஆசிரியர் ஏங்கல்ஸ் ,புளியால் பள்ளி ஆசிரியர் சேவியர்,தேவகோட்டை டி பிரிடோ ஆசிரியர்கள் ப்ரைட்,ஜெயசீலன்,சுப்ரமணியன் திருப்பத்தூர் தலைமை ஆசிரியர் திரு.ஸ்ரீதர் ராவ்,குழிபிறை முன்னாள் தலைமை ஆசிரியர் பால கிருஷ்ணன்,கீழசிவல்பட்டி உறவினர் திரு.அழகப்பன்,(இவர்கள் அனைவரும் தொலைபேசி வாயிலாக ) ஆகியோருக்கும்,முக நூல் ,வாட்சப் ,மெசேஜ் வாயிலாகவும் எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும்,தற்போது வாழ்த்து சொல்லி வருபவர்களுக்கும் ,like கொடுப்பவர்களுக்கும், விருது கிடைக்க காரணமான அனைவருக்கும் எனது நன்றி.
Thursday, 8 October 2015
பரிசு வழங்கும் விழா
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் எரி சக்தி துறை அமைச்சகத்தால் நடத்தப்படவுள்ள தேசிய போட்டிக்கு மாணவர்களை பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.போட்டியில் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் எரி சக்தி துறை அமைச்சகத்தால் நடத்தப்படவுள்ள தேசிய போட்டிக்கு மாணவர்களை பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.போட்டியில் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Subscribe to:
Posts (Atom)