நிலவேம்பு குடிநீர் வழங்
பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல் துவக்க விழா
தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பாக மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் நிலவேம்புகுடிநீர் கசாயத்தை மாணவர்களுக்கு வழங்கினார் . பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் தேவகோட்டை நகராட்சி சார்பில் நிலவேம்புகுடிநீர் வழங்கபட உள்ளது .டெங்கு தடுப்பு முறைகள் தொடர்பாகவும் விளக்கப்பட்டது.நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,சக்திவேல்,டெங்கு பணியாளர்கள் வள்ளி,சித்திகா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.ஆசிரியை செல்வ மீனாள் நன்றி கூறினார்.
பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவ,மாணவியர்க்கு நிலவேம்பு
குடிநீர் கசாயம் வழங்கினார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=E-IzwDgi9Sw
No comments:
Post a Comment